நம் காதல்
நான் உனக்கு மனைவியாக
நம் குழந்தைகளின் தாயாக
அவர்களின் குறும்புகளுக்கிடையில்
ஒரு பிஞ்சு மழலையாக
இப்படி துன்பமற்ற வாழ்க்கைக்காக
நெஞ்சம் முழுக்க பட்டாம்பூச்சியாகக்
காத்திருக்கையில்
விழுந்தது மனதில் ஒரு பாரம்
உனது பிரிவின் செய்தி
நெடிப் பொழுதில் எ(ன்)னை மறந்தேன்
பைத்தியமாகத் திரிந்தேன்
இதுவா நமது காதல்?
என்றும் மன உறுதியுடன்
முகத்தில் புன்னகை கொழிக்க
எதையும் எதிர்க்கும் சக்தியுடன்
இருக்கும் நீ
இன்று என்னுள்
ஒரு சுவாசமாக
இரத்த நாளத்தில் ஓடும்
உயிராக
எனது வாழ்க்கையில் இருக்கையில்
உன்னை மறக்காமல்
உன் வாழ்க்கை நெறிகளை
பின்பற்ற உறுதுணையாக
இருப்பது நம் காதல்
18 February 2008
06 February 2008
காதல் மயக்கம்..
காதல் செஞ்சுபுட்டேனே அம்மா..
அந்த மயக்கத்துல உன்னை மறந்தேனே அம்மா..
எனக்கு ஒரு நல்ல மனைவிய தேடினேனே அம்மா
ஆனா உனக்கு ஒரு மகளை தேடலேயே அம்மா..
என் படிப்புக்கு ஒரு அழகிய தேடினேனே அம்மா..
ஆனா அவள் பண்பை நான் பார்க்கலேயே அம்மா..
வீட்டுக்கு விளக்கு ஏத்த கூட்டி வந்தேனே அம்மா..
உன்னை வீட்டை விட்டு துரத்திட்டாளே அம்மா...
பத்து மாசம் என்னை சுமந்தாயே அம்மா..
உன்னை விட அவளை நம்பிட்டேனே அம்மா...
ஆறரிவு கடவுள் கொடுத்தாரே அம்மா..
அதை கல்யாணம் ஆன பிறகு தொலைச்சிப்புட்டேனே அம்மா..
Posted by parameswary namebley at 11:32 PM 3 comments
Labels: Poem
காலம் இன்னும் மாறவில்லை...
குப்பைகளின் நறுமணம் எங்களை வரவேற்றது...
பள்ளமும் குழிகளும் நிறைந்த அந்த சாலைகள்...
வெட்டிப் பேச்சுக்காக சூழ்ந்திருக்கும் இளவட்டங்கள்..
சாலையின் ஓரத்தில் கிடந்த காலி போத்தல்கள் ..
இன்று விடுமுறை என நினைவுறுத்தியன..
சார் சம்சு ஒன்னு வேணும்..
என கேற்கும் ஒரு சிறுவன்....
அவனை பின் தொடர்ந்து வந்த தள்ளாடிய கால்கள்...
காலம் இன்னும் மாறவில்லை....
*விசாலம் அம்மாவின் ஒன்னும் மாறவில்லை படித்தால் வந்த வரிகள் இவை...
எனது பழைய வசிப்பிடத்தை நினைவூட்டும் வகையில்...
Posted by parameswary namebley at 11:24 PM 0 comments