அப்பா.....
நீங்கள் இல்லாமல் எங்கள் வாழ்க்கை தலைகீழாக மாறி கொண்டிருக்கிறது. எங்களுக்கு ஆறுதல் தருவதாக சொல்லி பல மன சுமைகளை ஏற்றுகிறார்கள். நீங்கள் எங்கள் இடத்தில் இருந்திருந்தால் இவையாவும் நிகழ்ந்திருக்காது.
எங்களுக்கு ஆலமரமாய் இருந்தீர்களே அப்பா...
நிழல் கிடைக்காமல் நாங்கள் தவிக்கிறோமே அப்பா..
பலர் எங்கள் நன்மைக்காக பல சுமைகளை ஏற்றுகிறார்களே அப்பா...
என் வாழ்வில் கறுப்பு ஜீலையாக இந்த வருடம் எங்களை மூழ்கடிததே அப்பா...
இனிமேல் எப்பொழுது உங்களை நாங்கள் காண முடியும்..
கண்ணீருடன்
பரமேஸ்வரி நேமிலி...
19 September 2010
10 September 2010
நல்ல பல்பு....
தீடீர் என குளியல் அறையில் உள்ள விளக்கு எறியவில்லை.. அம்மாவும் மன கவலையுடன் யார் இதை இப்பொழுது மாற்றுவார்கள் .. என அப்பாவின் சிந்தைனையில் மூழ்கிவிட்டார்..
அப்பாவுடன் பல சமயங்களில் அவர் மின்சார வேளைகளை செய்யும் பொழுது உதவியாளராக இருந்தது என் மனம் கலங்கியது.
ஏணியை எடுத்து விளக்கை கலட்டிய பிறகு , அதை இனிமேல் பயன்படுத்த முடியாது என தெரிந்தது.
அப்பாவின் மின்சார பொருட்கள் இருக்கும் அறையை ஒரு அலசல் அலசலில், அவர் கைப்பட எழுதிய நல்ல பல்பு எனும் ஒரு பல்ப் என் கையில் சிக்கியது.
இப்படி ஒரு சூழ்நிலையில் நாங்கள் தடுமாற கூடாது என முன்பே எழுதிவைத்துள்ளார் போலும்..
என்றும் அவர் நினைவில் இருக்கும்,
பரமேஸ்வரி நேமிலி..
Posted by parameswary namebley at 11:13 PM 0 comments
Labels: என்னுள்
Subscribe to:
Posts (Atom)