Showing posts with label Poem. Show all posts
Showing posts with label Poem. Show all posts

18 February 2008


நம் காதல்

நான் உனக்கு மனைவியாக
நம் குழந்தைகளின் தாயாக‌
அவர்களின் குறும்புகளுக்கிடையில்
ஒரு பிஞ்சு மழலையாக

இப்படி துன்பமற்ற வாழ்க்கைக்காக‌
நெஞ்சம் முழுக்க பட்டாம்பூச்சியாகக்

காத்திருக்கையில்
விழுந்தது மனதில் ஒரு பாரம்
உனது பிரிவின் செய்தி

நெடிப் பொழுதில் எ(ன்)னை மறந்தேன்
பைத்தியமாகத் திரிந்தேன்
இதுவா நமது காதல்?
என்றும் மன உறுதியுடன்
முகத்தில் புன்னகை கொழிக்க‌
எதையும் எதிர்க்கும் சக்தியுடன்
இருக்கும் நீ
இன்று என்னுள்
ஒரு சுவாசமாக

இரத்த நாளத்தில் ஓடும்

உயிராக
எனது வாழ்க்கையில் இருக்கையில்
உன்னை மறக்காமல்
உன் வாழ்க்கை நெறிகளை
பின்பற்ற உறுதுணையாக
இருப்பது நம் காதல்

06 February 2008


காதல் மயக்கம்..

காதல் செஞ்சுபுட்டேனே அம்மா..
அந்த மயக்கத்துல உன்னை மறந்தேனே அம்மா..

எனக்கு ஒரு நல்ல மனைவிய‌ தேடினேனே அம்மா
ஆனா உன‌க்கு ஒரு ம‌க‌ளை தேட‌லேயே அம்மா..

என் ப‌டிப்புக்கு ஒரு அழ‌கிய‌ தேடினேனே அம்மா..
ஆனா அவ‌ள் ப‌ண்பை நான் பார்க்க‌லேயே அம்மா..

வீட்டுக்கு விள‌க்கு ஏத்த கூட்டி வ‌ந்தேனே அம்மா..
உன்னை வீட்டை விட்டு துர‌த்திட்டாளே அம்மா...

ப‌த்து மாச‌ம் என்னை சும‌ந்தாயே அம்மா..
உன்னை விட‌ அவ‌ளை ந‌ம்பிட்டேனே அம்மா...

ஆற‌ரிவு க‌ட‌வுள் கொடுத்தாரே அம்மா..
அதை க‌ல்யாண‌ம் ஆன பிற‌கு தொலைச்சிப்புட்டேனே அம்மா..