நட்பு...
மலரும் மொட்டுக்கள் இரண்டு கைக்கோர்த்து அந்த பூங்காவில் வலம் வந்துக்கொண்டிருந்தன.
"எனக்கு அந்த பட்டாம்பூச்சி வேணும்" தனது நண்பனிடம்கேட்டாள் தேவி.
"அய்யோ நான் பிடிக்க மாட்டேன். அம்மா சொன்னாங்க பட்டாம்பூச்சி கையைக் கடிக்குமாம். நான் பிடிக்க மாட்டேன்" என்றான் அச்சத்துடன் அந்த வால்குட்டி மாறன்.
"விஷ்ணு... மற்றும் வசந்த்.. வாங்க, நேரம் ஆச்சு .." ஒரு நடுத்தர வயது பெண்மணி இரண்டு வாண்டுகளையும் அழைத்தாள். தேவியின் முழுப்பெயர் விஷ்ணுதேவி மாறனின் பெயரும் வசந்த மாறன். இருவருக்கும் ஒரு இரண்டு வயது வித்தியாசம் தான்.
அவர்கள் இருவரும் அண்ணன் தங்கை அல்ல. அவர்களின் உறவின் பாலம் நட்பு, நட்பு மட்டுமே.
அண்டைவிட்டாரின் மகன் தான் வசந்த். அவனது வயது ஐந்து. விஷ்ணுவின் வயதோ மூன்று. பிறந்ததிலிருந்தே இவர்களின் நட்பு வளர்ந்தது என்று சொல்லலாம். வசந்த் வீட்டில் ஒரே பிள்ளை, அவனது பெற்றோர்கள் தவமிருந்து பெற்றப் பிள்ளை என்று சொல்லலாம். அவனுக்கு என்று வீட்டில் விளையாட துணை யாரும் இல்லாததால் தேவியுடன் தான் அவனது பொழுதே. ஒன்றாக பள்ளிக்குச் செல்வதும், ஒன்றாக விளையாடச் செல்வதும், வசந்த் அவன் வீட்டிற்குச் செல்வதே உணவு உண்ணவும் உறங்கவும் தான்.
யார் கண் பட்டதோ என்று தெரியவில்லை எப்பொழுதும் துள்ளி திரியும் தேவி அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் வெளியே செல்வதை குறைத்துக் கொண்டாள். வசந்த் அவளை பார்க்கும் நேரம் எல்லாம் அவள் படுக்கையில் படுத்துத்தான் இருப்பாள்.
"அம்மா ஏன்மா தேவி இப்படி இருக்கா? என கூட ஒழுங்காவே பேசமாட்டேங்கறா!. எப்பப் போனாலும் தூங்கிக்கிட்டே இருக்கா அம்மா", "என் கூட பள்ளிக்கு வந்து ரொம்பநாள் ஆச்சு அம்மா!" உண்மையான சூழ்நிலையை அறியாமல் அவன் அவனது அம்மாவை கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்தான்.
வசந்த்தின் அம்மாவோ பையனுக்கு எப்படி உண்மையை தெரிய வைப்பது என்று திண்டாடினார். "இல்லைடா செல்லம், தேவிக்கு உடம்பு சரியில்லை, காய்ச்சல்; அதான் தேவியால் எங்கேயும் வர முடியலெ. நீ கவலைப் படதே சீக்கிரம் அவள் சரியாகி உன்னோடு விளையாடுவா" என்று சமாளித்தாள்.
வசந்திடம் தேவிக்கு இரத்த புற்று நோய் வந்திருக்கிறது என்று மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?அவனுக்கு தான் அந்த சொல்லின் அர்த்தங்கள் புரியுமா?
அவனும் அம்மாவின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்தவனாய் அங்கிருந்து கிளம்பினான். நேராக சாமி அறைக்கு சென்று கை கூப்பி , கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு முணுமுணுத்தான். அவனது அம்மாவோ என்ன செய்கிறான் என்று அறிந்துக் கொள்ளும் ஆவலில் அவனை நெருங்க நெருங்க உண்மை புரிந்தது. அவரது கண்களும் கலங்க ஆரம்பித்தது. "சாமி, தேவி சீக்கிரம் நல்லா ஆகணும்.. சாமி , தேவி சீக்கிரம் நல்ல ஆகணும்" இந்த வார்த்தைகளைத்தான் அவன் திரும்பத்திரும்ப சொல்லி இறைவனை வேண்டிக் கொண்டிருந்தான். அவனை கட்டி அணைத்துக் கொண்டு அவனது அன்னையும் தேவிக்காக மனமுருகி வேண்டினார்.
சில மாதங்கள் கடந்தும் தேவியின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. வசந்தும் அவளை அன்றாடம் வீட்டில் வந்து சந்திப்பான். பள்ளியில் என்ன நடந்தது, யார் யார் என்ன செய்தார்கள் என்று அவளிடம் வந்து சொல்வதையே அவனது அன்றாட வேலையாக வைத்திருந்தான்.
ஒரு நாள் அவன் அம்மாதிரி சொல்லிக் கொண்டிருக்கையில் தேவி சட்டென்று சுய நிலையை இழந்தாள். வசந்த் பதறியடித்துக்கொண்டு தேவியின் அம்மாவிடம் சொல்ல, எல்லோரும் அவளை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.
அவளை சுற்றி பெரிய பெரிய இயந்திரங்கள் பூட்டினார்கள். பார்க்கவே சற்று பயமாக இருந்தது. வசந்த் தேவிக்கு என்னவாயிற்று என்று ஒன்றும் புரியாமல் கண்ணாடி கதவிற்கு வெளியே நின்று பயத்துடனும் பதட்டத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தான்.
இரண்டு, மூன்று மருத்துவர்கள் வந்தார்கள். தேவியின் அம்மாவிடம் ஏதோ சொன்னார்கள். தேவியின் அம்மா கதற ஆரம்பித்துவிட்டார். வசந்த்துக்கு அடிவயிற்றில் என்னவோ செய்தது. அவனது அம்மாவை இறுக்கமாகக் கட்டி அணைத்துக் கொண்டான்.
மருத்துவர்கள் தேவியின் பிஞ்சு உடல் எந்த ஒரு மருத்துவத்தையும் ஏற்க தயாராக இல்லை. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்று நேரம் குறித்துவிட்டார்கள். அங்குள்ள அனைவரும் அவள் இருந்த அறைக்கு சென்றார்கள். தேவியின் அம்மா தனது மகளின் நிலையை பார்த்து சகிக்க முடியாமல் தனது கணவரின் மேல் மயக்கமாக சாய்ந்துவிட்டார்.
வசந்த், தேவியின் அருகே சென்று கைகளை பிடித்து அழுத்தினான். அவள் கண்களை சற்றுத் திறந்து இலேசாக புன்னகை செய்தாள். அவ்வளவுதான். முணுக் என்ற ஒரு சத்தம் கேட்டது அந்த இயந்திரத்தில் இருந்து. ஒரே பதற்றச் சூழ்நிலை. என்ன நடக்கிறது என்று வசந்தினால் ஓரளவு யூகிக்க முடிந்தது. ஆனால் என்ன பயன் அனைத்தும் முடிந்துவிட்டது. கண்மூடி திறப்பதற்குள் அனைத்தும் முடிந்தாயிற்று. தேவி இவ்வுலகை விட்டுப்போய் விட்டாள். மூன்று தினங்கள் ஆகிவிட்டது.
வசந்த் காய்ச்சலினான் ஒரு வாரம் மிகவும் அவதியுற்றான். தேவி, தேவி என்று முனகினான். எப்பொழுதும் இருக்கும் சுறுசுறுப்பு இப்போதெல்லாம் அவனிடமில்லை. பள்ளிக்கூடம் விட்டு வந்தால் அவன் பாடம் மற்றும் அறை. இப்படிதான் அவனது வாழ்க்கை போய்கொண்டிருந்தது. மிகவும் சுரத்து குறைந்து காணப்பட்டான்.
அவனை பற்றிய கவலையடைந்த அவனுடைய பெற்றோர்கள் அவனுக்கு புதிய சூழ்நிலையை உருவாக்க வேறு நகரில் குடிப் பெயர்ந்தார்கள். அவர்களுக்கு தெரியாது எங்கு போனாலும் வசந்தின் மனதில் என்று மறையாத சுவடாய் தேவியின் அன்பான முகம் இருக்கும் என்பதும் அவனது இதயபீடத்தில் உற்றத் தோழியாய் என்றென்றும் அவள் அமர்ந்திருப்பாள் என்பதும்.
14 June 2007
கைநிறைய சம்பளம்
பெரிய வாகனம்
குளிர்சாதன அலுவலகம்
என பல இருந்தும்
என் கால்கள் நாடியது
இந்த வயல்களை தான்
Posted by
parameswary namebley
at
9:48 PM
1 comments
ஒரு பக்க கதை
ஓடாதே.........
என்னை நீ உன் உடலில் எப்பொழுது செலுத்தினாயோ, அன்றிலிருந்து நீ எனக்கு அடிமை. நான் கொஞ்சம் கொஞ்சமாக உன் உயிரைக் குடிக்கப் போகின்றேன்.
என்னை நீ எப்பொழுது தீண்டினாயோ... அன்று முதல் நான் உன்னை ஆட்கொண்டுவிட்டேன். உன்னை அணு அணுவாக உறிஞ்சி, உனது உடலை சிதைக்கப்போகிறேன்.
உன்னை உன் குடும்பத்தை விட்டு பிரித்து, உனது நண்பர்களிடமிருந்து ஒதுக்கி, நடுத்தெருவிற்கு வரவைக்க போகின்றேன். உன்னை கண்டாலே பிறர் அருவருப்பாக உணர்ந்து ஒதுங்கி போகும் அளவிற்கு உன்னை நான் மாற்ற போகின்றேன். சிறுவர்கள் உன்னை கண்டால் கல்லால் அடித்து துரத்துவதை வேடிக்கை பார்க்க போகிறேன். நீ சாக்கடை, குப்பை தொட்டி போன்றவற்றின் அருகில் தெரு நாயும் வெறுக்கும் வண்ணம் கடும் துர்நாற்றத்துடன் ஈக்கள் மோய்க்க ஒடுங்கி உட்கார்ந்திருக்க போவதை பார்க்கப்போகிறேன்.
நீ என்னிடம் இருந்து எங்கு ஓடினாலும் உன்னை துரத்தி துரத்தி இழுக்கப்போகிறேன் என்று வெறியுடன் சொன்னது போதைப் பொருள்.
Posted by
parameswary namebley
at
9:44 PM
2
comments
06 May 2007
உன்னை உண்ர்கின்றேன்...
பொல்லாத உலகம் வேண்டமென்று
தனியே போகையில்
நீ வருவது
எனக்கு நம்பிக்கை தருகிறது
Posted by
parameswary namebley
at
11:17 PM
2
comments
04 May 2007
08 April 2007
எனது முதல் முயற்சி கவிதையில்... ஆசிரியரிடம் இருந்து ஒரு கொட்டும் வாங்கிக் கொண்டேன்...
சட்டை
சாலையில் சட்டை இல்லாமல்
போகும் சிறுவர்களை
பார்த்துக் கொண்டிருக்கையில்
மேசையில் சிணுங்கியது
சட்டை போட்டிருக்கும்
எனது அலைபேசி.
Posted by
parameswary namebley
at
12:23 AM
1 comments
08 February 2007
அரசியல்வாதி ஆக மாட்டேன்....
அரசியல் என்றாலே எனக்கு வெறுப்பு.. ஏனோ தெரியவில்லை.. அந்த பக்கம் தலை வைத்து படுக்க மாட்டேன். ஏன்?
பெரிய காரணம் ஒன்றுமில்லை. அரசியலில் சேர்ந்தாலே பூவுடன் சேர்ந்து நாறும் மணக்கும் என்று சொல்வார்கள். நாம் நல்லது செய்தாலும் நம்மை சுற்றி நடக்கும் கெட்டதையும் நம் தலையில் திணித்துவிடுவார்கள். என்னதான் நல்லது செய்தாலும் நமக்கு எப்பொழுதும் நல்ல பெயர் மட்டுமே கிடைப்பதில்லை. அனைவரிடமும் திட்டு வாங்குகிற அளவிற்கு எனக்கு மன தைரியமில்லை.
அது மட்டுமல்லாமல் இன்னும் சிலர் சொல்வார்கள், நீ என்ன தான் நல்லவனா இருந்தாலும் உன்னை அங்க மாற்றிடுவாங்கனு.. அதான்.. நல்லவனா இருக்கிற என்னை தீயவனா மாற்றிவிட்டால்? அப்புறம் நான் நினைத்தாலும் என்னை நான் மாற்ற முடியாது...
ஆனால் யார் அப்பொ ஊரை திருத்துவது? யாராவது ரொம்ப நல்ல தைரியசாலி, எதுக்கும் பயப்படாம, யாராலும் தன்னை மாற்ற முடியாதுனு நினைக்கிறவங்க ஆகலாம்.
ஆனால் ஒன்னு.. கண்டிப்பா அவர் இறந்த பிறகு அவர் நல்லவரா கெட்டவரா என்று ஒரு பெரிய பட்டிமன்றமே நடக்கும்.. ஊர் எங்கயும்....
Posted by
parameswary namebley
at
5:07 PM
0
comments
2006 End
கால்கள் வலியை தாளாமல் தள்ளாடி கீழே விழ எத்தனித்தது... மங்கலாக சற்று தூரத்தில் ஒரு சிறு ஒளி வட்டம் கண்ணுக்கு தெரிந்தது. இந்த வெளிச்சமில்லாத இருண்ட இடத்தில் இருந்து வெளியேற கால்கள் துடித்தன. முட்களின் மேல் நடந்து வந்ததால் ஏற்பட்ட வலி இன்னும் ஆறவில்லை. முன்பை விட வலி கொஞ்சம் குறைந்திருந்தாலும், முட்களின் கூர்மையை அவை இன்னும் ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தன.
கால்கள் எழுந்து, தான் கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்த்தன. கண்களுக்கு எட்டிய தூரம் வரை அதிகம் முட்களாகவே இருந்தது. ஆனாலும் ஆச்சரியமாக ஆங்காங்கே சில வண்ணப் பூக்களும் மலர்ந்து இருந்தன. முட்களை பார்க்கும் பொழுது கண்கள் குளமாகியது. அந்த சம்பவங்கள் மட்டும் ஏன் தான் பசுமரத்தாணி போல மனதில் இருக்கின்றனவோ? அவைகளை மனம் மறக்க நினைத்தாலும் இந்த மூளையால் மறக்க முடியவில்லை. அதுதான் நமது இயல்போ?
ஒரு சில பூக்களும் இருக்கின்றனவே! எதற்காக அவை மலர்ந்து இருக்கின்றன? மூளை யோசித்தது. என்ன ஆயிற்று?அந்த காலகட்டத்தில் என்ன நடந்தது? கடந்த வந்த இந்த முன்னூற்றி அறுபத்து நான்கு நாட்களில் என்ன நடந்தது என்று மூளையில் பதிவா செய்ய முடியும்?
கைகள் மெதுவாக குறிப்பேட்டை பையிலிருந்து எடுத்து புரட்ட தொடங்கியது. அய்யோ பாவம் அந்த குறிப்பேடு வெண்மையாக இருந்தது. ஒரு துளி மையின் கரை கூட அதில் இல்லை. அதைப்பார்த்து தன்னைதானே கடிந்துக் கொண்டது அந்த கைகள். எத்தனை தடவை மூளை சொல்லியிருக்கும் அன்று நடந்தவற்றை பதிவு செய்ய, ஆனால் சோம்பேறித்தனத்தினால் அதை செய்யாமல் இருந்ததற்கு இன்று தண்டனையாக எப்பொழுது என்ன நடந்தது என்பது சட்டென்று நினைவிற்கு வரவில்லை.
சரி மெதுவாக சென்று அந்த ஒளிவட்டத்தை அடைந்த பிறகாவது நாம் இனி சந்திக்கப்போகும் நாட்களையும் அந்நாட்களில் நடக்கும் நிகழ்வுகளையும் எழுத தொடங்கலாமே.... ...இதோ மெதுவாக நடக்க தொடங்குகிறேன்...... நீங்களும் கூடத்தானே?அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
Posted by
parameswary namebley
at
5:03 PM
0
comments
18 January 2007
கனவே கலைந்து விடு
"சார் .. சார் ..", யாரோ தன்னை அழைப்பது போன்ற ஒரு உணர்வு. எதையும் பொருட்படுத்தாமல் அவன் தனது போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு தனது தூக்கத்தை தொடர்ந்தான்.
"சார்.. சார்" அதே குரல் மீண்டும் கேட்டது "என்னடா இது ஒரு மனுஷனெ நிம்மதியா தூங்கவிடுறங்களா!?" இவள் எங்கே போய் தொலைந்தாள், என எரிச்சலுடன் மனைவியை கூப்பிட்டான், இல்லை கத்தினான். தனது கூச்சலுக்கு யாரும் பதில் அளிக்காததை கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டான்.
"என்னடா! இது எப்பொழுதும் வீட்டில் இருக்கும் இவள் இன்று எங்கே போய் தொலைந்தாள்?", என்று குரல் கேட்ட திசையை நோக்கி முணுமுணுத்துக்கொண்டெ எரிச்சலுடன் சென்றான்.
"சார்...சார்", இன்னும் அந்த குரலின் தொந்தரவு நிற்கவில்லை. "யார்டா இது?.. இப்படி ரொம்ப நேரமா கழுத்தை அறுக்கிறானே." என்று முனகிக் கொண்டே வாசல் கதவை திறந்தார்.
"என்ன இது ஏன் இவ்வளவு கூட்டம்...?" என்ற தனது வியப்பை அடக்கிக் கொண்டு. "என்ன சார்! ஏன் இவ்ளோ கூட்டம்? என்ன ஆச்சு இப்பொ?", என சராமாரியாக கூட்டத்தை பார்த்து கேள்விகளை கேட்டார்.
கூட்டத்தில் ஒருவர், "உங்க பேரு ராஜன் தானே சார்?", "ஆமாம்" . "நீங்க வாங்கின லாட்டரி சீட்டுக்கு ஒரு லட்சம் விழுந்திருக்கு சார். வாழ்த்துக்கள் சார். அதான் உங்களை பேட்டி எடுக்க நிறைய பத்திரிகைகளில் இருந்து நிருபர்கள் வந்து இருக்காங்க", ஒருவர் சொல்லி முடிப்பதற்குள் அவனை சுற்றி இருந்தவர்கள் மாறி மாறி அவனிடம் கேள்வி கேட்க தொடங்கினார்கள்."சார் எப்படி நீங்க இவ்வளவு அதிர்ஸ்டசாலியா இருக்கீங்க? ஏதாவது தனி பயிற்சி எடுக்கறீங்களா?" இப்படி அர்த்தம் இல்லாத பல கேள்விகள் அவனை அம்பு மாதிரி துளைத்து எடுத்தன. அப்பொழுதே நினைத்தான் , என்னடா இது கேள்விகள் எல்லாம் சற்று கோமாளிதனமாக இருக்கிறதே என்று. அந்த எண்ணங்களை சற்று தள்ளி வைத்து விட்டு அவன் அவர்களுக்கு பதில் சொலல முயற்சித்தான்.
"சார் இங்க பாருங்க.. சிரிங்க சார்.." என்று ஒருவர் கூட்டத்தில் இருந்து தனது கையில் உள்ள கேமிரா மூலம் புகைப்படம் எடுக்க முயற்சித்தார். அவரது கேமிராவில் இருந்து வந்த ஒளியால் கண்கள் கூசியதுமல்லாமல் ஏதோ ஈரமாக இருப்பது போல உணர்வு?!
ஈரமா!, "அய்யோ அம்மா " என்று அலறியடித்துக் கொண்டு தனது கட்டிலில் இருந்து விழுந்தான் ராஜன். கண் விழித்து பார்த்ததில் தான் தெரிந்தது அவரது மனைவி கையில் ஒரு காலி குடத்துடன் அங்கே நின்று கொண்டிருந்தாள். அருகில் பார்த்தான். தண்ணீர் அறை முழுவதும் கொட்டியிருந்தது. தூக்க கலக்கத்தில் கட்டிலுக்கு அருகில் மனைவி எடுத்து வைத்திருந்த குடத்தை உதைத்திருந்ததும் அதிலிருந்து தண்ணீர் கொட்டியிருந்ததும் தெரிந்தது.
"என்னடீ.. என்ன செஞ்ஜெ" என்று தனது ஆத்திரத்தை மனைவியிடம் காட்டினான். " என்னங்க, வேலைக்கு நேரம் ஆச்சு. உங்களால இப்பொ ஒரு குடம் தண்ணீர் வீணாக்ப் போயிடுச்சு. சீக்கிரம் வேலைக்கு கிளம்புங்க..".
"ஏன்டி என் உயிரை வாங்குறெ காலங்காத்தால...? ஒரு ஆயிரம் வெள்ளி சம்பளத்துக்காக என்னை இப்படி வாட்டி எடுக்கிறேயே... இன்னும் கொஞ்ச நாள்ல பாரு எனக்கு ஒரு லட்சம் கிடைக்க போகுது. அப்போ நான் இருபத்தி நாலு மணி நேரமும் தூங்கத்தான் போறேன். அப்ப நீ என்னிடம் இப்படி எல்லாம் தொந்தரவு செய்ய மாட்டே!" தனது கணவனின் இந்தப் பேச்சைக்கேட்டு அவள் தன்னையே நொந்துக்கொண்டு தன் தலையிலடித்துக்கொண்டாள்.
இது அன்றாடம் அவளது வாழ்க்கையில் நடப்பது தான். காலையில் தனது கணவரை மிகவும் சிரமப்பட்டு வேலைக்குச் அனுப்ப அவள் படும் பாடு கொஞ்சம் நஞ்சமல்ல. இவளுக்கு வேலைக்கிடைத்தப்பிறகுதான் சூழ்நிலையில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டது. வீட்டுக்கு தேவையான பொருட்களை முடிந்த அளவு அவளே வாங்கி சமாளித்துக்கொள்கிறாள். இருந்தாலும் வீட்டு வாடகை, மின் கட்டணம், குழந்தைகளுக்கான பள்ளிக்கட்டணம் போன்ற செலவுகளுக்கு பல நேரங்களில் தனது கணவரின் கையை அல்லவா அவள் எதிர்பார்க்க நேரிடுகிறது.
முன்பு எல்லாம் ராஜன் இப்படி இல்லை. மிகவும் பொறுப்புள்ள மனிதராக இருந்தார். ஆரம்பத்தில் தனது சம்பளத்தில் இருந்து ஒரு மிகச்சிறியதொரு தொகையை மட்டும் லாட்டரி எடுக்க செலவழிப்பான். இரண்டு மூன்று தடவை அவருக்கு அதிர்ஷ்டவசமாக கொஞ்சம் தொகை கிடைத்தது. அதில் இருந்து லாட்டரிமேல் அவருக்கு ஒரு வெறி ஏற்பட்டுவிட்டது. இந்த வெறியானது நாளடைவில் அவன் குடும்பத்திற்கே சோதனையாக வந்தது. முதலில் சிறு தொகையை செலவழித்தவன், பிறகு தனது முழு சம்பளத்தையும் லாட்டரிக்கே செலவழித்தான்.
பாவம் அவனது மனைவி, ராஜனின் இந்த மாற்றத்தால் மிகவும் நொந்து போனாள். இதனால அடிக்கடி வீட்டில் சண்டை. காலப்போக்கில் சண்டை போடுவதால் எந்த பயனுமில்லை என்று தெரிந்துக் கொண்டு அவளே ஒருமுடிவுடன் வேலைக்கு செல்லத் தொடங்கினாள்.படிப்பறிவு குறைவாக இருந்ததால் ஒரு சிறிய தொழிற்சாலையில் சாதாரண தொழிலாளி வேலைத்தான் அவளுக்கு கிடைத்தது. தனது கணவரின் பொறுப்பில்லாத செயலால் பிள்ளைகள் பாதிக்கப்படக் கூடாது என்ற எண்ணத்தால்தான் அவள் சிரமத்தைப் பாரக்காமல் அந்த வேலைக்கு சென்று வருகிறாள்.
அன்றும் அப்படிதான் அவள் தனது வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வரும் வழியில் சாலையை கடக்கையில் வேகமாக வந்த ஒரு லாரியில் மோதி மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டாள். இந்த செய்தி தெரிந்தவுடன் அரக்க பரக்க மருத்துவமனைக்கு ஓடினான் ராஜன். அங்கு கால் முறிவு ஏற்பட்டதால் அவளுக்கு ஒரு அவசர சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், அதற்கு உண்டான பணத்தை சீக்கிரம் மருத்துவமனையில் கட்டுமாறும் மருத்துவர் கூறிவிட்டார்.
கையை பிசைந்து நின்றான் ராஜன். அவனது பணப்பையில் இருந்தது சில .. இல்லை இல்லை பல லாட்டரி சீட்டுகள் மட்டுமே. தன் சம்பளத்தில் முக்கால் வாசி வெறும் லாட்டரி சீட்டுகள் மட்டும் வாங்கவே செலவழித்து விட்டான். இப்பொழுது அவ்வளவு பெரிய தொகைக்கு எங்கு செல்வது? யாரை கேட்பது?
என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தான். வீட்டிற்கு சென்று மனைவியின் நகைகள் ஏதாவது கிடைக்கிறதா என பார்க்கலாம் என்று எண்ணினான். வீட்டிற்கு சென்று அலமாரிகளை அலசினான். அங்கு ஏராளமான லாட்டரி சீட்டுக்கள் அடுக்கிவைக்கப்பட்டிருப்பது அவன் கண்ணில் பட்டது. எத்தனை சீட்டுகள். இத்தனை சீட்டுக்களும் அவன் வாங்கியவையா? அவன் கண்களை அவனால் நம்பவே முடியவில்லை. சற்று நேரம் மனக்கணக்கு போட்டான் தான் இந்த சீட்டு வாங்கி கரியாக்கிய பணம் எவ்வளவு என்று. அம்மாடியோவ்! இவ்வளவு தொகையா! இவ்வளவுபணத்தை சேமித்து வைத்து இருந்தால் இந்நேரம் நான் ஒரு நல்ல நிலைக்கு வந்து இருப்பேனே! லாட்டரியில் போட்டுவிட்டேனே என ஒருகணம் வேதனையுடன் நினைத்தான். தனது பொறுப்பற்ற செயலால் இப்பொழுது மருத்துவமனை செலவிற்கு கூட பணமில்லாமல் திண்டாடுவதைக் கண்டு மிகுந்த மனவேதனையும் தன் மீதே வெறுப்பும் கொண்டான். இனிமேல் இம்மாதிரி நடப்பதில்லை என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டான். அவன் கையில் கிடைத்த அவன் மனைவியின் ஒரே ஒரு ஆரம். மிகவும் வருத்தத்துடன் அதை எடுத்துக்கொண்டு கடைக்கு அடகு வைக்க சென்றான். அப்பொழுது ஒரு சிறுவன் "சார் சார் வாங்குங்க லாட்டரி வாங்குங்க சார். ரொம்ப அதிர்ஷ்ட நம்பர் சார். பாருங்களேன் ". கைகள் துறுதுறுக்க அவன் தன்னிடம் காட்டிய எண்களை பார்த்தான். அந்த எண்கள் சுருக்கென்று அவன் மனதில் குத்தியது. ஆம் அது அவனது கல்யாண நாள. அதுவும் இன்று தான் அந்த நாள். அய்யோ மனம் துடித்தது. எப்படி எங்கள் கல்யாண நாளை நான் மறந்து விட்டேன்... அந்த ஓரு கணத்தில் அவன் மனதில் கொஞ்ச நஞ்சம் இருந்த லாட்டரி ஆசையும் மங்கி அழிந்துவிட்டது. வேண்டாம் என்று அச்சிறுவனிடம் கூறிவிட்டு மருத்துவமனையை நோக்கி வேகமாக சென்றான்.
மறுநாள் காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அமைதியாக தூங்கிக்கொண்டிருக்கும் மனைவியின் படுக்கைக்கு அருகில் அவன் அன்றைய நாளிதழை புரட்டிக்கொண்டிருக்கும் பொழுது, நேற்று வாங்காத அந்த லாட்டரி எணணுக்கு ஒரு லட்சம் கிடைத்திருப்பதாக பிரசுரித்திருந்தார்கள். ஆனால் அவனுக்கு அதன் மீது நாட்டமும் அல்லது இழந்துவிட்டோமே என்ற ஏமாற்றமோ சிறிதும் ஏற்படவில்லை. உழைப்புதான் உண்மையானது.. இதுப்போன்ற அதிர்ஸ்டம் வரும் என காணும் கனவுகள் நிலையில்லாதவை. நம்மையும் அழித்து, நமது குடும்ப வாழ்க்கையையும் அழித்துவிடும் என்று எண்ணமே அவன் மனதில் நிலைத்திருந்தது. மனவியின் முகத்தைப் பார்த்தான். மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத நிம்மதியான உணர்வு.
Posted by
parameswary namebley
at
3:34 PM
2
comments
மறு வாய்ப்பு
"அம்மா எனக்கு ஐஸ்கிரீம் வேண்டும்!!", சின்னஞ்சிறு வாண்டு ஒன்று தனது அம்மாவின் சேலையை பிடித்துக் கொண்டு சிணுங்கி அழுதுக் கொண்டிருந்தான். அவனது குட்டி உடம்பிற்கு ஒரு குட்டி டீசெர்ட்டும் ஜீன்ஸும் அளவு எடுத்து தைத்தது போல இருந்தது.
தனது அம்மாவிடம் போலியாக சிணுங்கிக் கொண்டு அவன் அழுதது சற்று வேடிக்கையாக இருந்தது. தனது அம்மாவுக்கு பிள்ளைகள் அழுவது பிடிக்காது என்று அந்த வயதிலேயே நன்றாக தெரிந்து வைத்திருந்தான் தருண்.
"என்னடா கண்ணா?, என்ன ஆச்சு? இப்போ தானே டாக்டர் மாமா கிட்ட போயிட்டு வந்தோம். இன்னும் ஊசி போடணுமா? "என்று தனது அம்மா கேட்டவுடன் அவசரமாக வேண்டாமம்மா என்று மறுதளித்தான். அவன் கண்கள் குளமாகியதைப் பார்த்து பதறினாள் மாதவி.
"சரிடா கண்ணா, ஊசி வேண்டாம். இப்போ ஐஸ்கிரீமும் வேண்டாம். நான் உனக்கு இரண்டு வாரம் கழிச்சி வாங்கித்தர்றேன்" என்று தனது சுட்டிப் பிள்ளையை சமாளித்தாள் மாதவி.
"அப்பா....! அவர்களை நோக்கி நடந்து வந்துக் கொண்டிருந்த அப்பாவை நோக்கி ஓடினான் தருண். "அப்பா..அப்பா, அம்மா எனக்கு ஐஸ்கிரீம் வாங்கி தர்றதா சொல்லி இருக்காங்க. நீங்களும் ஒண்ணு வாங்கித்தரணும்!" என்று அன்பு கட்டளையிட்டான். அந்த அன்புக் கட்டளைக்கு தலையை ஆட்டினார் ராகவன்.
ராகவனுக்கும் மாதவிக்கும் கல்யாணம் ஆகி பன்னிரண்டு வருடங்கள் ஆகப்போகிறது. மணவாழ்க்கை நன்றாக இருந்தாலும் நீண்ட காலம் பிள்ளையில்லாமல் அவர்கள் ஏங்கி வந்தார்கள். அவர்களின் அந்த ஏக்கத்தை தீர்த்தவன் தருண். பன்னிரண்டு வருடங்கள் குழந்தைப் பிறக்காமல் அவர்கள் பட்ட துன்பம் கொஞ்சநஞ்சமல்ல. மாதவியை உற்றார் உறவினர்கள் அவதூறு பேசியும் தூற்றியும் கேவலப்படுத்தியது எல்லாம் இன்னும் ராகவன் நினைவில் மாறாத வடுக்களாக இருக்கின்றது.
மருத்துவர் சான்றிதழ் வைத்து இருந்தாலும் மாதவியை மட்டுமே குறைக் கூறியது உறவினர்கள் கூட்டம். இவர்களுக்கு நூறு சதவிதம் பிள்ளைகள் பெற தகுதியும், வாய்ப்பும் இருக்கிறது என்று மருத்துவர்கள் பலமுறை கூறி இருந்தாலும் அதை பற்றி சிறிதும் சிந்திக்காமல் மனசாட்சியே இல்லாமல் பலமுறை இவர்களின் நிம்மதியை குலைக்கும் வண்ணம் பேசியும், ஏசியும் வந்தார்கள். ஆனால் யார் எப்படி பேசினாலும் தனது மனவியை எந்தக் காரணம் கொண்டும் ராகவன் விட்டுக் கொடுக்கவில்லை. ஒரு பிள்ளையைத் தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று மாதவி பலமுறை எவ்வளவோ எடுத்துக் கூறினாலும், அப்படி எடுத்தால் அது நமக்கு இரண்டாவது பிள்ளையாக மட்டும் தான் இருக்கவேண்டும். மேலும் இப்பொழுது தத்து எடுத்தால் அது நமக்குள் ஒரு குறை இருப்பதை ஒத்துக் கொள்வதற்கு சமம் என்று பிடிவாதமாக மறுப்பு தெரிவித்து விட்டான்.
இறைவன் அவர்களை ஏமாற்றவில்லை. தாமதமாக இருந்தாலும் தருண் வடிவில் அவர்களின் வேண்டுதலை இறைவன் நீண்ட காலம் கழித்து நிறைவேற்றினான். தருண் அவர்கள் வாழ்க்கையில் வந்ததில் இருந்து இது வரைக்கும் ஒரு துளி துன்பத்தைக்கூட அவர்கள் உணர்ந்தது இல்லை.
வாகனத்தை ஓட்டிக்கொண்டு பழைய நினைவுகளை அசைப்போட்டுக்கொண்டிருந்த ராகவன் மனைவியின் குரலை கேட்டு நிகழ்காலத்திற்கு வந்தார். பன்னிரெண்டு வருடம் காத்திருந்தாலும் அந்த காத்தல் வீண்போகவில்லை என்று மனம் மகிழ்ந்தது. .
மாதவியிடம் பேசிக் கொண்டே தனது வாகனத்தை செலுத்தினார். திடீர் என்று அவரின் கைதொலைபேசி அலறும் சத்தம் கேட்டது. அவரோ தன்னிடம் இருக்கும் காது இணைப்பானை பயன்படுத்தாமல் ஒரு கையால் வண்டியை ஓட்டிக்கொண்டே மறுகையால் கைப்பேசியில் உரையாடினார். அழைத்தது யாருமில்லை அவரது அம்மாதான்.
அந்த அழைப்பு அவரின் கவனத்தை சிறிது சிதற வைத்தது. அவருக்கு முன்னால் மிகவும் மெதுவாக ஒரு சரக்கு வாகனம் ஆமை போல நகர்ந்துக்கொண்டிருந்தது. அதை தாண்டுவதற்காக அடுத்தப் பாதைக்கு மாறினார். அப்பொழுது மிகவும் வேகமான அடுத்த பாதையில் வந்துக் கொண்டிருந்த ஒரு வேனை கண்டதும் என்ன செய்வது என்று புரியாமல் ஒரு கணம் தடுமாறினார். அந்த கணத்தில் அவருக்கு கேட்டதெல்லாம் ஒரு பயங்கரமான க்ரீச்...சத்தம் மட்டுமே.
****************************************************************************************************
மீண்டும் ராகவனுக்கு நினைவு திரும்பும்பொழுது அவர் படுக்கையை சுற்றி அவனது பெற்றோர்களும் அவனது ஒரே தங்கையும் அழுதுக்கொண்டிருந்தனர். ராகவனால் தலையை கொஞ்சமும் அசைக்க முடியவில்லை. மிகவும் பாரமாக இருந்தது. அதை விட அவனது நெஞ்சு மிக பயங்கரமாக வலித்தது. அவனால் அந்த வலியை கொஞ்சம்கூட தாங்க முடியவில்லை. ஏதேதோ நினைவுகள் வந்து வந்து போயின. எதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியவில்லை.
திடீரென்று ஒரு குழந்தையின் அழுக்குரல் எங்கேயோ தூரத்தில் கேட்பது போல இருந்தது. ஆஹா... நினைவுக்கு வந்து விட்டது "தருண்... மாதவி!!" அவர்கள் எங்கே? அவர்களும் என்னுடன் தானே இருந்தார்கள்? அவர்களுக்கு என்ன ஆயிற்று? ஒன்றும் புரியவில்லை, பேசவும் முடியவில்லை. மூளை மரத்தது போல இருந்தது. தலையில் ஆணியால் அடிப்பது போல ஒரு உணர்வு. மிகவும் கஸ்டப்பட்டு அந்த வலியையும் பொருட்படுத்தாமல் மாதவி தருண் என்று முனகினான்.
அவனை சுற்றி இருந்தவர்கள் என்ன சொல்வதென்று தெரியாமல் தவித்தார்கள். உண்மை சம்பவத்தை எப்படி சொல்வது? சொல்லாமல் எப்படி இருப்பது என்றும் யாருக்கும் தெரியவில்லை.
அவர்களின் முகவாட்டம் இன்னும் மனதில் பயத்தை உண்டாக்கியது. ராகவனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. தன் உடலை அசைக்கும் பொழுது மரண வலிதான் அவனுக்கு ஏற்பட்டது.
எழவும் முடியாமல் பேசவுல் முடியாமல் அவன் பட்ட வேதனையை தாங்காமல் உண்மையை போட்டு உடைத்தாள் அவனது தங்கை. "அண்ணியும் தருணும் ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே இறந்துட்டாங்க அண்ணா!" என்று கூறி ஓவென்று அழுதாள்.
அதைக் கேட்ட மறுகணம் ராகவன் தனது சுயநினைவை இழந்தார். அவனுக்கு எல்லாமே இருட்டாக தெரிந்தது. மீண்டும் நினைவு திரும்பும் பொழுது ராகவன் விபத்துக்குள்ளாகி ஐந்து நாட்கள் ஆகியிருந்தது.
இப்பொழுது அவனது நிலை சற்றே தேறி இருந்தது. மனைவி மகனை இறுதியாக கூட ஒருமுறையேனும் தனக்கு பார்க்க கொடுத்துவைக்கவில்லையே என்ற தாங்க முடியாத வேதனையில் கண்கள் நீர்கோத்து நின்றது. அன்று மட்டும் தான் கவனமாக ஓட்டிச் சென்றிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது அல்லவா? கடவுளே எனக்கு தயவு செய்து இன்னுமொரு வாய்ப்பை தா. என்னை மறுபடியும் அந்த விபத்து நடப்பதற்கு முன்பிருந்த நிலைக்கு கொண்டு செல். இந்த கொடூரம் நிகழாமல் நான் பார்த்துக் கொள்கிறேன். அன்று மட்டும் நான் வாகனம் ஓட்டும்போது கைப்பேசியில் பேசாமல் சிறிது கவனமாக இருந்திருந்தால்........
Posted by
parameswary namebley
at
3:33 PM
0
comments
17 December 2006
கனியிருப்ப காய் கவர்ந்தற்று
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
இந்த குறளில் மறைந்திருக்கும் உண்மை என்னவென்றால் , இனிமையாய் கேட்கும் பல நல்ல சொற்கள் நம்மிடையே இருக்கையில் மனதை புண்படுத்தும் சொற்களை நாம் ஏன் தேர்ந்தெடுக்கின்றோம்?
சொல்பவர்களை மட்டுமல்லாமல் அந்த சுடும் சொற்களைக் கேட்பவர்களின் மனதையும் அல்லவா காயப்படுத்துக்கின்றன? அவை அறிந்து பேசு என்று தெரிந்து தான் சொல்லி இருக்கிறார்கள். நாம் பேசும் வார்த்தைகள் எக்காரணத்தைக் கொண்டும் மற்றவர்களின் மனதில் வடுக்களைப் பதிய வைக்கக்கூடாது.
தீயினால் சுட்டப் புண் உள்ளாறும்
ஆறாதே நாவினால் சுட்ட வடு.
சுட்டெரிக்கும் தீயினால் வந்த காயம் நாள் போக்கில் நமது உள்ளத்தில் எந்த ஒரு வடுக்களையும் விட்டு செல்வது கிடையாது. ஆனால் நம் நரம்பு இல்லாத நாக்கினால் வரும் கடும் சொற்கள், அதனால் உண்டாகும் காயங்கள் மனதில் எப்பொழுதும ஆறாத காயங்களாக தான் இருக்கும்.
சொன்ன சுடு சொற்களுக்காக ஒருவர் நம்மை மன்னித்துவிட்டேன் என்று கூறினாலும் அவர் நம்மை பார்க்கும் பொழுது எல்லாம் அந்த சொல் நம் மனதில் வந்து வலிக்கவே செய்யும்.
ஆகவே, எப்பொழுதும் வார்த்தைகளை அள்ளி விசாமல், அந்த சொல் பிறரை நோகடிக்குமா என்று யோசித்து பிறகே நமது விவாதங்களை முன் வைக்க வேண்டும்.
Posted by
parameswary namebley
at
9:51 PM
1 comments
26 November 2006
எதிர்காலம்
சேவக் கோழியின் சத்தம் கேட்டு படுக்கையை விட்டு எழுந்தான் சரண். எப்பொழுதும் அவன் எழும் நேரம் என்று அவன் அறிந்திருந்தான். நேரம் பார்க்க கூட அவன் வீட்டில் கடிகாரம் இல்லையே.
வறுமை எனும் வார்த்தையை தவிர வேறு எதுவும் அவர்களுக்கு சொந்தம் இல்லை. வேலை செய்யும் அளவிற்கு வயது ஆகிவிடவில்லை அவனுக்கு, இடைநிலை பள்ளியில் பயிலும் வயதுதான் .
என்ன செய்வது? வீட்டின் சூழ்நிலை அப்படி. பொறுப்பற்ற அப்பா, எந்த நேரமும் சாராய வாடையுடனும் அதற்கேத்தாற்போல கையில் ஒரு பாட்டில் உடனும், தனக்கே உறிதான தள்ளாட்டத்துடன் இருப்பார்.
அம்மா எவ்வளவு தான் போராடுவார்கள்? நாட்கள் ஆக ஆக அவரால் போராட இயலாத நிலை. அம்மாவால் சமளிக்க முடியவில்லை. பாதி வயிறு கஞ்சி குடித்து நாட்களை தள்ளிக் கொண்டிருந்தவர்கள் நாட்கள் ஆக ஆக கால் வயிறாக மாறியது. பசி என்று தம்பி தங்கைகள் அம்மாவிடம் கதறும் பொழுது, அவனது படிப்பு, அவனுக்கு பெரியதாக படவில்லை.
தனது எதிர்காலத்தை பணயம் வைத்தான். நால்வரும் பசியால் வாடுவதை விட, இவனது கல்வியை பாதியில் விட்டுவது மேல் என்று எண்ணினான். இதனால் வீட்டில் உள்ளவர்களின் வயிறாவது நிரம்பும் என்று முடிவுக்கு வந்தான்.
அவன் என்ன செய்வான்? குடும்ப சூழ்நிலை அப்படி. தன் தம்பி தங்கைகளின் எதிர்காலங்கள் ஒளிமையமாக இருக்க தனது கல்வியை இருட்டு அறையில் பூட்டினான்.
"சீக்கிரம் வா சரண்,மேஸ்திரி இன்னைக்கு நிறைய மரம் வெட்டனும்னு சொன்னார்", அம்மாவின் குரல் தன்னை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது.
தனது காலை கடன்களை முடித்துவிட்டு ரப்பர் தோட்டத்தை நோக்கி அவன் கால்கள் நடந்தன......
-- அன்புடன்,
பரமேஸ்வரி
Parameswary
Life is A Box of Chocolates
We never know what to expect next.....
Posted by
parameswary namebley
at
11:07 PM
0
comments
மதுவினால் ஏற்படும் விளைவுகள்
நாங்கள் எங்களது வாகனத்தை அந்த அங்காடி முன் நிறுத்தினோம். அப்பொழுது ஒரு முதியவர் தள்ளாடிக் கொண்டு எங்களை நோக்கி வந்தார். வாகனததை செலுத்தி வந்த அக்காவோ, எனது தாயாரிடம் கண்டிப்பாக சொல்லி விட்டார். " அம்மா அவர் என்னிடம் பணம் கேட்டால் கண்டிப்பாக நான் தர மாட்டேன் ".. என்ன, வியப்பாக இருக்கிறதா?
ஆனால் இதுதான் உண்மை. இந்த ஊரில் பல இடங்களில் இது நடக்கிறது.
ஆம், இந்த சம்பவம் ஒன்றும் புதியதல்ல எங்களுக்கு. இந்த நகரத்தில் இது ஒரு சாதரண சம்பவம். வாகனததை நிறுத்தும் பொழுது இம்மாதிரியான ஆட்கள் வந்து காசு கேட்பது வழக்கம் தான். இதில் எனக்கும் எனது அக்காவிற்கும் சிறு துளி கூட விருப்பம் இல்லை.
அதுவும் மது அருந்துபவர்களை கண்டாலே வெறுக்கும் எங்களுக்கு, ஒருவர் குடிப்பதற்க்கு பணம் கொடுப்பது, அவரை மது அருந்துவதற்கு தூண்டி விடுவதற்கு சமம் என எண்ணுவோம்.
பசி என வந்தால் பரவாயில்லை. இப்படி மதுவுக்காக வந்து காசு கேட்டால் அது அநியாயம் அல்லவா? சில நேரங்களில் இவர்களை மேல் அதிகாரியிடம் காட்டிக் கொடுக்கலாம் என எண்ணினால், இப்படி செய்பவர்கள் தொண்ணுறு சதவிகிதம் நமது இனத்தவர்கள் எனும் உண்மையை நினைக்கும் பொழுது, அமைதியாகிவிடுகிறோம்
இம்மாதிரி மதுவுக்காக பணம் கேட்பவர்கள் பலர் முதியவர்களே. இவர்களுக்கு பிள்ளைகள் இல்லையா என வினவினால், சிலருக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆனால் இவர்களை பராமரிப்பதில்லை. இன்னும் சிலரோ, பிள்ளைகள் மது அருந்துவதற்காக பணம் கொடுக்காதலால் வீட்டை விட்டு வந்து இப்படி பணத்தை சேர்க்கிறார்கள், அவர்களின் நலத்தை அழிக்க.
மது எப்படி ஒரு மனிதனின் வாழ்க்கையை சீரழிக்கின்றது என்பதற்க்கு இது ஒரு மிகச்சிறந்த சிறு உதாரணம். மஞ்சூர் அண்ணாவிற்கு நன்றி. என் எழுத்துபிழைகளை அவர்தான் சரி செய்தார்.
-- அன்புடன்,
பரமேஸ்வரி
Parameswary
Life is A Box of Chocolates
We never know what to expect next.....
Posted by
parameswary namebley
at
11:04 PM
0
comments
12 November 2006
என் பார்வையில்....*
காலையில் இருந்தே என்னால் நன்றாகவே தூங்க முடியவில்லை. முதலில் அம்மாவும் அப்பாவும் வெளியே சென்றார்கள், பிறகு பெரிய அக்காளும் சின்ன அக்காளும் சென்றார்கள். அவர்கள் நால்வரும் திரும்பும் பொழுது கையில் இரண்டு பெரிய டின்களும் சில தூரிகைகளையும் வாங்கி வந்தார்கள்.
பிறகு இரண்டு அக்காமார்களும் வீட்டை சுத்தம் செய்தார்கள். என்னால் ஒரு நிமிடம் கூட வீட்டில் இருக்க முடியவில்லை. என் தூங்குமிடத்தில் உற்கார்ந்து இருக்க முடியவில்லை. என் சின்ன அக்காள் எதையோ சுத்தம் செய்வதாய் வீட்டை இரண்டாக்கி கொண்டிருந்தாள். என் பெரிய அக்காள் அம்மாவுடன் அடுப்பறையில் எதையோ தீய வைத்துக் கொண்டிருந்தாள். எப்பொழுதும் நறுமணமாக இருக்கும் சமயல் இன்று வேறு மணம் வரும் பொழுதே எண்ணினேன், இது அக்காளின் வேலையாக இருக்கும் என்று...
நல்ல வேளை அம்மா எனக்கு எப்பொழுதும் தனியாக சமைத்துவிடுவார். எனக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. வீட்டில் இருக்கும் மற்றவரை நினைத்தால் தான் கொஞ்சம் பயமாக இருக்கிறது. சரி அனைவரும் ஏதோ செய்துக் கொண்டிருக்கிறார்களே என்று நாமும் உதவி செய்யலாம் என்று சென்றால் உடனே அம்மா நீ இங்கு வர வேண்டாம் உன்
இடத்தில் பேசாமல் உட்கார் என்று சொல்லிவிடுவார். நானும் அம்மாவின் சொல்லை தட்டாமல் உட்கார்ந்துவிடுவேன்.
அவர்கள் வாங்கி வந்த சாயத்தை சுவரில் பூசும் பொழுது அதன் நாற்றாம் தாங்க முடியவில்லை. எப்படிதான் அம்மாவும் அப்பாவும் இந்த நாற்றத்தை சமாளிக்கிறார்களோ தெரியவில்லை. எனக்கு நுகர்வும் சக்தி சற்று அதிகம் என்று அவர்களுக்கு தெரிந்தும் என்னை இப்படி இக்கட்டான சூழ்நிலையில் வைத்துவிட்டார்கள், இதனாலயே இரண்டு நாட்கள் என்னால் சரிவர உணவை உட்கொள்ள முடியவில்லை. மிகுந்த சோர்வடைந்தேன்.
இதை காணுற்ற அம்மா மிகவும் வேதனை அடைந்தார். அம்மா அக்காள்களை
எனக்கு சோறு ஊட்டி விடச் சொன்னார். அம்மாவின் ஆதங்கம் எனக்கு புரிந்தாலும் ஒரு பருக்கை சாதம் கூட என் தொண்டையில் இறங்க மறுத்தது.
பிறகு பெரிய அக்காள் எனக்கு ஒரு தம்ளர் பால் கலக்கி கொடுத்தார். அதை குடித்த பிறகு தான் அம்மாவின் முகத்தில் சந்தோஷத்தை பார்த்தேன்.
அடுத்த சில நாட்களில் வீட்டில் உள்ள அனைவருக்கும் அம்மா புதிய உடைகளை வாங்கிக் கொண்டு வந்தார் அம்மா. எனக்கு மட்டும் ஒரு உடைகளை வாங்கித்தர வில்லை.ஏன் என்று அம்மாவிடம் வினவிய பொழுது எனக்கு தகுந்த உடைகள் அங்கு இல்லை என்று சொல்லிவிட்டார்.!!!
நானும் அமைதியாக எனது இருப்பிடம் சென்றேன்.
இரு வாரங்களாக தூங்க இயலாமல் இன்று தான் சற்று கண் அயர்ந்தேன்.. அதற்குள் பட்டாசு வெடி சத்தம். நான் அலறி அடித்துக் கொண்டு வீட்டின் உள்ளே ஓடினேன். அங்கு பார்த்தால் வீட்டில் உள்ள அனைவரும் அவர், அவர் கைப்பேசியை வைத்துக் கொண்டு தீபாவளி வாழ்த்துக்களை கூறிக் கொண்டிருந்தனர்.. யாருமே என்னை கண்டுக் கொள்ளவில்லை. நான் ஒரு மூலையில் சுருண்டுக் கொண்டேன்.அதுதானே என் நிரந்தர இடம்!!
இந்த தீபாவளி வந்தாலே இப்படி தான் நாங்கள் எல்லாம் வீட்டிலும் ஏன் ரோட்டிலும் கூட இருக்க முடியாது....
ஒவ்வொரு வருடமும் தீபாவளி வரும் போதே எனக்கு ஜுரமும் கூடவே வந்துடுது...... ம்ம்ம். என்ன தான் பண்ணுவதோ தெரியலெ...
சரி நான் யார் தெரிகிறதா...
-- அன்புடன்,
பரமேஸ்வரி
Parameswary
Life is A Box of Chocolates
We never know what to expect next...
Posted by
parameswary namebley
at
11:14 PM
3
comments
எனது முதல் முயற்ச்சி கவிதையில்... ஆசிரியரிடம் இருந்து ஒரு கொட்டும் வாங்கிக் கொண்டேன்...
*சட்டை*
சாலையில்
சட்டை இல்லாமல்
போகும் சிறுவர்களை
பார்த்துக் கொண்டிருக்கையில்
மேசையில்
சிணுங்கியது
சட்டை போட்டிருக்கும்
எனது அலைபேசி.
அன்புடன்,
பரமேஸ்வரி
Parameswary
Life is A Box of Chocolates
We never know what to expect next.....
Posted by
parameswary namebley
at
11:11 PM
0
comments
*மனநிறைவு *
அது என்ன மன நிறைவு? அதை எப்படி நாம் அடைய முடியும்? அனைவராலும் அதை அடைய முடியுமா? கண்டிப்பாக இவ்வுலகில் உள்ள அனைவராலும் மன நிறைவை அடைய முடியும். ஆனால் எவ்வளவு சீக்கிரம் ஒருவரால் இவற்றை அடைய முடியும் என்று கேள்வி எழுப்பினால் அது அவரவர் மனநிலையைப் பொறுத்தது.
சிலர் காலையில் இறை வணக்கம் செய்யாவிடில் மன நிறைவு அடைய மாட்டார்கள். இன்னும் சிலர் ஒரு நாள் தேநீர் அருந்தாவிடில் அன்று எதையோ இழந்த மாதிரி தவிப்புடன் இருப்பார்கள். இன்னும் சிலரோ அவர்களின் அன்றாட கடமைகளில் ஒன்றை செய்யாவிடில் அன்றைய பொழுது நன்றாக இருக்காத மாதிரி உணர்வார்கள்.
சரி என்னடா இவள் ஏதோ சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேசுகிறாளே என்று எண்ணுகிறீர்களா? ஒன்றும் பெரிய விசயம் இல்லை. சில நாட்களுக்கு முன் நான் அடைந்த மன நிறைவை பற்றி எழுதலாம் என்ற ஒரு சின்ன ஆசைதான். இவள் இன்னும் அயர்லந்து பற்றி எழுதாமல் வேறு ஏதேதோ எழுதராளேன்னு கேட்பது நன்றாகவே புரிகிறது. ஆனால் இதை முதலில் எழுதினால் தான் என் மனது நிறைவு அடையும்.
வெளியூர் பயணம் முடிந்து அலுவலதிற்கு சென்றப் பொழுது வழக்கத்தை விட மலை மாதிரி வேலைகள் குவிந்து கிடந்தன. என்ன செய்ய, எல்லாம் வழக்கம்போலத்தான்? எப்படியும் இரவும் பகலும் உட்கார்ந்து செய்து முடிக்க வேண்டிய சூழ்நிலை.
எனது நண்பர்கள் வட்டம் என்னக்கு ஒன்றை நினைவு படுத்தினார்கள். நான் வெளியூர் செல்லும் முன்னரே இந்த செயலில் ஈடுபட்டேன். ஆனால் நான் வந்து மறுவாரம் இதை எங்கள் குழு செயல்படுத்த எண்ணியிருந்தார்கள்.
எவ்வளவு மன மகிழ்ச்சி, மலைபோல குவிந்துக் கிடக்கும் பல வேலைகளுக்கு இடையில் நாங்கள் சிறு கலந்துரையாடல் செய்து அந்த நிகழ்ச்சியை எப்படி நல்ல முறையில் நடத்த வழி வகுத்தோம் என்பதே அது.
தேவையானவற்றை செய்து முடித்தாகி விட்டது. இனி நாளை காலை எங்கள் திட்டத்தின்படி அந்த இல்லத்திற்கு செல்ல வேண்டியது தான். எந்த இல்லம்? எங்கு செல்லப் போகிறார்கள் என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. சரி இனியும் ரகசியம் வேண்டாம். இதோ சொல்லிவிடுகிறேன்.
ஒரு அன்பு இல்லத்திற்கு நாங்கள் செல்லப் போகிறோம். அங்கு இருக்கும் சின்னஞ்சிறுசிட்டுகளுக்கு வலைத்தளம் செய்வது எப்படி என்று சொல்லித்தர போகின்றோம்.
என்ன அன்பு இல்லமா? அது என்ன? எங்கே இருக்கிறது? இன்னும் கேள்விகள் தொடர்கின்றனவா? எங்கு அன்பு நிறைந்து இருக்கின்றதோ அதுதான் அன்பு இல்லமும் கூட. நான் கூறும் இந்த இல்லம் சற்று சிறப்பு வாய்ந்த அன்பு இல்லம். பல நாடுகளில் இருக்கின்றன. பலரால் செய்ய இயலாத காரியங்களை இங்குள்ளவர்கள் செய்கிறார்கள்.
அப்படி என்ன செயல்? அன்புக்காக ஏங்கி நிற்கும் பல பிஞ்சு உள்ளங்களை கட்டி காப்பாற்றுவது என்ன எளிதான செயலா? ஒன்று அதற்கு மனம் வேண்டும், இன்னொன்று அதை செயல் படுத்த துணிவு வேண்டும். பலர் வேண்டாம் என்று தூக்கி எறிந்த மலர்களையும், மொட்டுகளையும் இங்கு பராமரிக்கிறார்கள்.
என்ன இவள் எதையும் புரியும்படி எழுத மாட்டாளா என்று நீங்கள் முனகுவதும் என் காதில் விழுகிறது. இதோ சொல்லிவிட்டேன்.. நான் கூறியது அனாதை இல்லங்களைப் பற்றிதான். அந்த சொல் பிடிக்கவில்லை. ஆகவே அன்பு இல்லம் என்று கூறினேன். அப்பாடா! எங்கள் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் சிலர் இந்த நல்லச் செயலில் ஈடுபட்டு இருந்தார்கள். ஒரு அன்பு இல்லத்தை தேர்ந்தெடுத்து அங்கு உள்ள சில மாணவர்களுக்கு எங்களுக்கு தெரிந்த அளவு எப்படி வலைப்பகுதி வடிவமைப்பது என்பதுப் பற்றி சொல்லித்தரலாம் என்ற ஒரு எண்ணம். இதில் விருப்பம் உள்ளவர்கள் இந்த செயலில் ஈடுபடலாம் என்று மடல வந்தது தான் தாமதம். எங்கள் நண்பர்கள் வட்டம் எல்லோரும் ஆர்வத்துடன் குவிந்து விட்டார்கள்.
வாரவாரம் நடக்கும் கூட்டத்திற்கு சென்றோம். பல இன்னல்களை நாங்கள் எதிர்நோக்கினோம். முதலில் அந்த அன்பு இல்லத்தில் கணினி பற்றாக்குறை. சிலர் அதற்கான வேலைபளுவினை எடுத்துக் கொண்டார்கள். பிறகு இன்னும் சிலர் சிறுவர்களுக்கு பாடங்களை போதிக்கும் கடமையை எடுத்துக் கொண்டார்கள். சில வருடங்களாக நானும் சில மாணவர்களுக்கு எனக்குத் தெரிந்தவற்றை பகிர்ந்துக் கொள்வதால் நானும் என் நண்பர்களும் போதிக்கும் கடமையை ஏற்றுக் கொண்டோம். இடையில் என்னால் இந்த நடவடிக்கைக்கு நேரடியாக செல்ல இயலாமல் போனது. ஆனால் என் நண்பர்கள் அன்றாடம் நடக்கும் முக்கிய விசயங்களை என்னிடம் கூறுவார்கள். எங்கள் குழு அந்த இல்லத்திற்கு செல்லவேண்டிய நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது. நானும் இந்தப் பணியில் நேரடியாக கலந்துக் கொள்ள மிகவும் ஆர்வத்துடன் இருந்தேன்.
ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த அந்த நாளும் வந்தது. சனிக்கிழமை காலை, எழுந்து சுறுசுறுப்புடன் செயல் பட்டேன். ஒவ்வொரு சனிக்கிழமையும் தவறாமல் சந்திக்கும் பெருமாளை இன்று சந்திக்க முடியாது என்ற சஞ்சலம். அதில் என்ன இருக்கிறது மகளே, அடுத்த வாரம் நாம் சந்திக்கலாம் என்று எனக்கு அன்புடன் விடைக் கொடுத்தார், அவர். ஷீடா, கம் ஹோங் மற்றும் புஷ்பா, நாங்கள் எப்பொழுதும் சந்திக்கும் இடத்தில் எனக்காக காத்திருந்தார்கள். என்னை சிறுவர்களுக்காக சில உணவு பொருட்களை வாங்கி வர சொல்லி இருந்தார்கள் . நானும் நேற்று இரவே அங்காடிக்குச் சென்று சில திண்பண்டங்களை வாங்கி வைத்து விட்டேன்.
பிறகு எல்லோரும் அந்த அன்பு இல்லத்தை நோக்கிச் சென்றோம். அதன் பெயர் ரேக்தார். அந்த இல்லத்தின் அலுவலகதிற்கு முதலில் சென்றோம். அங்கு ஒரு ஆடவரும் ஒரு பெண்மணியும் அவர்களுடைய வேலையில் கவனமாக இருந்தார்கள். எங்களை அறிமுகப் படுத்திக் கொண்டோம். எங்கள் அலுவலகத்தின் பெயரைக் கூறியதும் எங்களை அமரசொல்லிவிட்டு, மாணவர்களை அழைக்கச் சென்று விட்டார் அந்த பெண்மணி. அந்த ஆடவரும் எங்களிடம் சற்று உரையாடிவிட்டு அவரது வேலையில் மூழ்கிவிட்டார்.
என் நண்பர்களும் அங்கிருந்த நாளிதழ்களில் மூழ்கி விட்டார்கள். என்னால் ஒரு இடத்தில் உட்கார்ந்து இருக்க முடியவில்லை. எழுந்து அங்கிருந்த அறிவிப்பு பலகையில் இருந்த சில புள்ளி் விவரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
நான் அந்த அன்பு இல்லத்தைப்பற்றி் சேகரித்த விவரங்களை விட இந்த விவரங்கள் வேறுபட்டு இருந்தன. இன்னும் பல புதிய விவரங்களும் கிடைத்தன. ஆக மொத்த சிறுவர்கள் 59. அனைவரும் பெண்கள். மாநில வாரியாக அங்குள்ளவர்களை பிரித்து வைத்திருந்தார்கள். நான் வசிக்கும் மாநிலம் தான் அதில் முதலிடம் வகித்தது. பெருமைப் பட வேண்டிய விசயம் அல்லவே. அந்த விவரம் எதைக் குறிக்கின்றது? எங்கள் மாநிலத்தில்தான் பண்பில்லாதவர்கள் பாசமில்லாதவர்கள் பலர் இருக்கிறார்கள் என்றல்லவா காட்டுகிறது. மனம் மிகவும் சங்கடப்பட்டது. வேதனையில் தொண்டை அடைத்தது.
பிள்ளைகள் கணினி அறையில் தயாராக இருக்கிறார்கள் என்று அந்த பெண்மணி வந்து கூறினார். நாங்களும் சற்று தயக்கத்துடன் அங்கு சென்றோம். என்ன தயக்கம் என்றால் எங்கள் நால்வருக்கும் இம்மாதிரியான அன்பு இல்லங்களுக்கு வருவது இது தான் முதல் அனுபவம். இந்த சின்னஞ் சிறு உள்ளங்களிடம் எப்படி பேசுவது? எப்படி பழகுவது? அவர்கள் மன நிலை எப்படி இருக்கும்? இம்மாதிரியான பல கேள்விகளுடன் அந்த அறைக்கு சென்றோம்.
விஸ்தாரமான அறை. அதில் ஆறு கணினிகள். அவற்றில் மூன்றில் "பழுது" என்று அட்டை ஒட்டப் பட்டிருந்தது. இன்னும் மூன்றில் இரண்டு மட்டுமே செயல் பட்டுக் கொண்டிருந்தது. மூன்றாவதில் ஏதோ கோளாறு. வந்த மாணவர்களின் எண்ணிக்கை இருபது. ம்ம் இரண்டு கணினி இருபது மாணவர்கள். என்ன செய்ய? நண்பர் கம் ஹோங் அவருடைய அலுவலக கணினியை எடுத்து வந்திருந்தார். அதனையும் அவர்களுக்குப் பயன்படுத்த கொடுத்தோம்.
ஆரம்பத்தில் நாங்கள் நால்வரும் தயங்கி நின்றிருந்தாலும் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எங்களை அறிமுகப் படுத்திக் கொண்டோம். பிறகு அவர்களை அறிமுகம் செய்ய சொன்னோம். முதலில் எங்களிடமிருந்து சற்றுத் தள்ளி தயக்கத்துடன் இருந்தவர்கள் நாங்கள் அவர்களுக்கு புது புது உத்திகளை கற்று கொடுக்க தொடங்கியவுடன் தயக்கம் அகன்று ஆர்வத்துடன் நெருங்கி வந்தனர்.
நாங்கள் சொல்லித்தருவதை மிகவும் கவனத்துடன் கேட்டனர்.
இடையிடையே அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை எங்களிடம் கேட்டு தெளிவுப் பெற்றனர். புதிதாக பல கேள்விகளும் கேட்டனர். அவர்களின் ஆர்வம் எங்களையும் தொற்றிக்கொண்டது. மனதில் மகிழ்ச்சியுடன் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தோம். நேரம் ஆக ஆக மனதில் லேசான ஒரு கவலை வளர ஆரம்பித்தது.
ஏன் என்று கேட்கிறீர்களா? அவர்களை விட்டுப் பிரிய வேண்டுமே என்ற கவலைதான். என்ன செய்வது பிரிந்து தானே ஆகவேண்டும். கடைசியில் நாங்கள் எங்களுடன் எடுத்துச்சென்ற உணவுப் பொருட்களை அவர்களுக்கு கொடுத்து விட்டு அவர்களுடன் சேர்ந்துப் புகைப்படங்கள் எடுத்து விட்டு பிரிய மனமில்லாமல் அவர்களிடமிருந்து பிரிந்தோம். அவர்களுக்கும் அதே நிலை.
நாங்கள் அவர்களுடன் பகிர்ந்துக் கொண்ட நேரம் மிக மிக குறைவு என்றாலும் அவர்களுடன் பழகிய அந்த சில மணி நேரங்கள் எங்கள் மனதில் ஏதோ ஒரு இனம் தெரியாத உணர்ச்சியையும் ஆழ்ந்த திருப்தியையும் உண்டாகியது என்னவோ நிஜம்.
இப்படி அன்றாட வார இறுதியை பயனுள்ள வகையில் கழித்தோமானால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று திரும்பும் போது என் மனம் ஏனோ நினைக்க ஆரம்பித்தது......
அன்புடன்,
பரமேஸ்வரி
Parameswary
Life is A Box of Chocolates
We never know what to expect next.....
Posted by
parameswary namebley
at
11:04 PM
1 comments
21 July 2006
நாளை காலையில் சீக்கிரம் எழ வேண்டும் என அன்பு அன்னை கட்டளையிட்டார். காலையில் ஒரு திருமணத்திற்குச் செல்ல வேண்டும். எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் எறும்புப் போல சுறுசுறுப்புடன் எழுந்து, வீட்டு வேலைகளையும், தங்கள் சொந்த வேலைகளையும் செய்து முடித்து திருமணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.
அப்பாடா! ஒரு வழியாக எல்லோரும் கிளம்பி விட்டார்கள். தந்தை மோட்டார் வாகனத்தில் அமர்ந்து விட்டார், ஆனால் அன்னையை இன்னும் காணவில்லை. "அம்மா, நாங்கள் ரெடி நீங்கள் சீக்கிரம் வாருங்கள்." என்று நாங்கள் வாயைத் திறப்பதற்குள் அம்மாவும் வேகமாக வந்து வாகனத்தில் ஏறினார்.
திருமண மண்டபத்தை நாங்கள் அடையும்பொழுது இன்னும் மாப்பிள்ளை மற்றும் பெண்ணுக்கு அலங்காரங்கள் நடந்துக்கொண்டிருந்தன. சரியான நேரத்திற்குள் நாங்கள் வந்து சேர்ந்தோம் என்று ஒரு பெருமூச்சு, இல்லையென்றால் தந்தையிடமிருந்து நன்றாக திட்டு வாங்கியிருப்போம்.
அங்கே பார்! அந்த பொண்ணு அழகான பாவாடை அணிந்திருக்கிறாள், அவளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது அது. இங்கே பார் இப்பையனின் காலணியின் வர்ணம் நன்றாக இருக்கின்றது" என எங்களால் முடிந்த அளவு குழந்தைகளை ரசித்துக் கொண்டிருந்தோம். இப்பொழுதுதான் தெரிகின்றது ஏன் தாய்மார்கள் தங்களின் பிள்ளைகளுக்கு திருஷ்டி சுற்றிப் போடுகிறார்கள் என்று. எங்களைப் போன்றோரின் பொல்லாத கண் பிள்ளைகளுக்கு நோய் வரக்காரணமாக இருந்து விட்டால்? இப்படியே எங்களது அலசல்கள் தொடர்ந்தன. எங்கள் முன் ஒரு பெண்மணியும் அவரின் ஐந்து குழந்தைகளும் உட்கார்ந்து இருந்தார்கள். நான்கு பெண்கள் மற்றும் கடைக்குட்டி ஒரு ஆண். அந்த ஆண்பையனோ எங்கள் இருவரையும் பார்த்து ஆச்சரியப் பட்டான். எங்களுக்கு அந்த வியப்பான பார்வையின் காரணம் புரிந்தது. நாங்கள் பார்ப்பதற்கு இரட்டை குழந்தைகள் மாதிரி இருப்போம் ஆகவே சில குழந்தைகள் எங்களை வியப்பாகப் பார்ப்பார்கள். எப்படி இருவரும் ஒரே மாதிரி இருக்கிறார்கள் என்று. அந்த வயதில் அவர்களுக்கு அறிவியல் தெரியாது அல்லவா? நாங்கள் அச்சிறுவனைப் பற்றியும் எங்கள் சிறு வயது அனுபவங்களையும் பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுதுதான் எங்கள் கவனத்தை ஈர்த்தாள் அச் சிறுமி. அவளும் அந்த ஐவரில் ஒருத்தி. "இறைவனின் செல்லக் குழந்தைகளில் ஒருத்தி" என்று எனது சகோதரி கூறினாள்.
அப்பாவும் அம்மாவும் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களிடம் பேசி கொண்டிருந்தார்கள். நாங்கள் இருவரும் வழக்கம்போல அங்கும் இங்கும் ஓடி கொண்டிருந்த சின்ன சிறிய வாண்டுகளை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தோம்.
"அங்கே பார்! அந்த பொண்ணு அழகான பாவாடை அணிந்திருக்கிறாள், அவளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது அது. இங்கே பார் இப்பையனின் காலணியின் வர்ணம் நன்றாக இருக்கின்றது" என எங்களால் முடிந்த அளவு குழந்தைகளை ரசித்துக் கொண்டிருந்தோம். இப்பொழுதுதான் தெரிகின்றது ஏன் தாய்மார்கள் தங்களின் பிள்ளைகளுக்கு திருஷ்டி சுற்றிப் போடுகிறார்கள் என்று. எங்களைப் போன்றோரின் பொல்லாத கண் பிள்ளைகளுக்கு நோய் வரக்காரணமாக இருந்து விட்டால்?
இப்படியே எங்களது அலசல்கள் தொடர்ந்தன. எங்கள் முன் ஒரு பெண்மணியும் அவரின் ஐந்து குழந்தைகளும் உட்கார்ந்து இருந்தார்கள். நான்கு பெண்கள் மற்றும் கடைக்குட்டி ஒரு ஆண். அந்த ஆண்பையனோ எங்கள் இருவரையும் பார்த்து ஆச்சரியப் பட்டான். எங்களுக்கு அந்த வியப்பான பார்வையின் காரணம் புரிந்தது. நாங்கள் பார்ப்பதற்கு இரட்டை குழந்தைகள் மாதிரி இருப்போம் ஆகவே சில குழந்தைகள் எங்களை வியப்பாகப் பார்ப்பார்கள். எப்படி இருவரும் ஒரே மாதிரி இருக்கிறார்கள் என்று. அந்த வயதில் அவர்களுக்கு அறிவியல் தெரியாது அல்லவா?
நாங்கள் அச்சிறுவனைப் பற்றியும் எங்கள் சிறு வயது அனுபவங்களையும் பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுதுதான் எங்கள் கவனத்தை ஈர்த்தாள் அச் சிறுமி. அவளும் அந்த ஐவரில் ஒருத்தி. "இறைவனின் செல்லக் குழந்தைகளில் ஒருத்தி" என்று எனது சகோதரி கூறினாள்.
அனைவரும்தானே இறைவனின் குழந்தைகள். ஆமாம், நாம் அனைவரும் இறைவனின் குழந்தைகள் தான் அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஆனால் இவர்கள் இறைவனின் செல்லக் குழந்தைகள். எல்லோரையும் இறைவனின் செல்லக் குழந்தைகள் என கூறுவதைவிட இவர்களை மட்டும் இறைவனின் செல்லக் குழந்தைகள் என கூறுவது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். யார் இவர்கள்?ஆம் இவர்களைதான் நம்மில் பலர் ஊனமுற்றவர்கள் என்று கூறுவார்கள். ஆனால் எனக்குப் பிடித்தமான சொல் இறைவனின் செல்லக் குழந்தைகள். எவ்வளவு அழகான வார்த்தை. இவர்களை இப்படி கூப்பிடுவது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது பாருங்கள். இனி நாம் அனைவரும் இறைவனின் செல்லக் குழைந்தைகள் என்றே அழைப்போம். இதற்கிடையில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி ஊட்டியது அந்த இறைவனின் செல்லக் குழந்தையின் சகோதரிகளின் செயல்கள். அவர்கள் அவளை மிகவும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொண்டார்கள். அதுவும் அச்சிறுமியின் தங்கை தனக்கு எந்த உணவு கிடைத்தாலும் முதலில் தன் அக்காவுக்கு (இறைவனின் செல்லக்குழந்தைக்கு கொடுத்துவிட்டுதான் தான் உண்டாள். அந்த அற்புதமான காட்சியை கண்குளிர நாங்கள் பார்த்து ரசித்தோம். இவர்களின் ஒற்றுமை என்றென்றும் இப்படியே இருக்கவேண்டும் என நாங்கள் இறைவனை வேண்டிக்கொண்டோம் அது எப்படி ஒற்றுமை உடையும் என வினவுகிறீர்களா? எல்லாம் நமது புத்திக் கெட்ட மதியால்தான். நமக்கு வயது ஆக ஆக நாம் நமது புத்தியை பயன்படுத்துவதை விட நம்மை சுற்றி உள்ளவர்கள் என்ன சொல்கிறார்கள் எனறே பயப்படுகின்றோம். அதன்படி செயல்படுகின்றோம்.
யார் இறைவனின் செல்லக் குழந்தைகள்?
அனைவரும்தானே இறைவனின் குழந்தைகள். ஆமாம், நாம் அனைவரும் இறைவனின் குழந்தைகள் தான் அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஆனால் இவர்கள் இறைவனின் செல்லக் குழந்தைகள். எல்லோரையும் இறைவனின் செல்லக் குழந்தைகள் என கூறுவதைவிட இவர்களை மட்டும் இறைவனின் செல்லக் குழந்தைகள் என கூறுவது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
யார் இவர்கள்?
ஆம் இவர்களைதான் நம்மில் பலர் ஊனமுற்றவர்கள் என்று கூறுவார்கள். ஆனால் எனக்குப் பிடித்தமான சொல் இறைவனின் செல்லக் குழந்தைகள். எவ்வளவு அழகான வார்த்தை. இவர்களை இப்படி கூப்பிடுவது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது பாருங்கள். இனி நாம் அனைவரும் இறைவனின் செல்லக் குழைந்தைகள் என்றே அழைப்போம்.
இதற்கிடையில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி ஊட்டியது அந்த இறைவனின் செல்லக் குழந்தையின் சகோதரிகளின் செயல்கள். அவர்கள் அவளை மிகவும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொண்டார்கள். அதுவும் அச்சிறுமியின் தங்கை தனக்கு எந்த உணவு கிடைத்தாலும் முதலில் தன் அக்காவுக்கு (இறைவனின் செல்லக்குழந்தைக்கு கொடுத்துவிட்டுதான் தான் உண்டாள். அந்த அற்புதமான காட்சியை கண்குளிர நாங்கள் பார்த்து ரசித்தோம். இவர்களின் ஒற்றுமை என்றென்றும் இப்படியே இருக்கவேண்டும் என நாங்கள் இறைவனை வேண்டிக்கொண்டோம்
அது எப்படி ஒற்றுமை உடையும் என வினவுகிறீர்களா? எல்லாம் நமது புத்திக் கெட்ட மதியால்தான். நமக்கு வயது ஆக ஆக நாம் நமது புத்தியை பயன்படுத்துவதை விட நம்மை சுற்றி உள்ளவர்கள் என்ன சொல்கிறார்கள் எனறே பயப்படுகின்றோம். அதன்படி செயல்படுகின்றோம்.
சிலர் அவர்களின் சகோதரர்கள் யாரேனும் இறைவனின் செல்லக்குழந்தை என்றுக் கூறுவதை கேவலம் என எண்ணுகிறார்கள். ஏன் அப்படி என்று நாம் அலசி ஆராய்ந்தோமானால் அதற்கு முதல் காரணம் அவர்களின் மானங்கெட்ட சுய கௌரவம். ஐயோ! என் சாகோதரர்களில் ஒருவர் இறைவனின் செல்லக்குழந்தை என்று என் நண்பர்களுக்கு தெரிந்தால் அவர்கள் என்னிடம் பழகமாட்டார்கள். என்னை ஒதுக்கி வைத்துவிடுவார்கள் என்று தேவையில்லாமல் நினைத்து குழம்பிவிடுகிறார்கள். இது உண்மையா என்று சிந்தித்துப் பார்த்தால், ஒரு இருபத்து ஐந்து சதவிகிதம் உண்மை இருப்பதை நாம் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும். எங்கேயோ படித்தக் கவிதை இது...பாதி சிறகுகளுடன் பறக்க நினைக்கிறவர்களை,மீதி சிறகாய் இருந்து நாம் பறக்க வைப்போம்".யார் எழுதியது என தெரியவில்லை. யாராகினும் இக்கவிதையை உதிர்த்த அந்த சிந்தனைக்கு மிக்க நன்றி. சிறகு உடைந்த பறவைகள் என கடவுளுக்குத் தெரிந்தும் அதை நம்மால் பறக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையால் தானே நம்மிடம் அவர் அனுப்பி வைத்தார்? ஆனால் சிலர் அவரது நம்பிக்கையை அவநம்பிக்கையாக மாற்றுகிறார்கள்.
சிலர் அவர்களின் சகோதரர்கள் யாரேனும் இறைவனின் செல்லக்குழந்தை என்றுக் கூறுவதை கேவலம் என எண்ணுகிறார்கள். ஏன் அப்படி என்று நாம் அலசி ஆராய்ந்தோமானால் அதற்கு முதல் காரணம் அவர்களின் மானங்கெட்ட சுய கௌரவம். ஐயோ! என் சாகோதரர்களில் ஒருவர் இறைவனின் செல்லக்குழந்தை என்று என் நண்பர்களுக்கு தெரிந்தால் அவர்கள் என்னிடம் பழகமாட்டார்கள். என்னை ஒதுக்கி வைத்துவிடுவார்கள் என்று தேவையில்லாமல் நினைத்து குழம்பிவிடுகிறார்கள். இது உண்மையா என்று சிந்தித்துப் பார்த்தால், ஒரு இருபத்து ஐந்து சதவிகிதம் உண்மை இருப்பதை நாம் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும்.
எங்கேயோ படித்தக் கவிதை இது...
"பாதி சிறகுகளுடன் பறக்க நினைக்கிறவர்களை,
மீதி சிறகாய் இருந்து நாம் பறக்க வைப்போம்".
யார் எழுதியது என தெரியவில்லை. யாராகினும் இக்கவிதையை உதிர்த்த அந்த சிந்தனைக்கு மிக்க நன்றி.
சிறகு உடைந்த பறவைகள் என கடவுளுக்குத் தெரிந்தும் அதை நம்மால் பறக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையால் தானே நம்மிடம் அவர் அனுப்பி வைத்தார்? ஆனால் சிலர் அவரது நம்பிக்கையை அவநம்பிக்கையாக மாற்றுகிறார்கள்.
புறத்தைப் பார்த்து புத்தகத்தை மதிப்பிடாதே ஊனத்தைப் பார்த்து மனிதனை மதிப்பிடாதே இவ்வார்த்தைகளில் எவ்வளவு உண்மைகள் இருக்கின்றன? அவர்களைப் பார்த்து பாவப்பட சொல்ல வில்லை. ஆனால் அவர்களையும் ஒரு சாதாரண மனிதர்களாய் நம்மில் ஒருவராய் பாருங்கள். ஏன்? இம்மாதிரியான குழந்தைகள் பலர் இவ்வுலகில் சாதனை புரியவில்லையா? சிலர் தனது கரு அங்கஹீனம் குன்றியாதாக இருக்கின்றது எனத் தெரிய வந்தால் அக்கருவை அழித்து விடுகிறார்கள். இக்காலத்தில் அதுவும் பல அதிநவீன கருவிகள் இருக்கும் இக்காலத்தில் கருக்கலைப்பு மிகவும் சர்வ சாதாரணமான செயலாய் இருக்கின்றது. ஏன் அறிவியல் கருவிகள் தவறு செய்வது கிடையாதா? சில மருத்துவர்கள் பிறக்கப்போகும் குழந்தை ஆண் எனக் கூறுவார்கள் ஆனால் பிறக்கும் குழந்தையோ பெண்ணாக இருக்கும். அதேபோல் இம்மாதிரியான விசயங்களிலும் இக்கருவிகள் தவறுகள் செய்வது கிடையாதா? அதற்காக அக்கரு உண்மையாக அங்கஹீனம் குன்றியதாக இருந்தால் அதைக் கருக்கலைப்பு செய்யலாம் என்றும் யாரும் கூறவில்லை. அப்படி செய்பவர்களுக்கும் கொலைக்காரர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று எனக்குத் தெரியவில்லை. கொலைசெய்பவனுக்கு இங்கு தண்டனை உண்டு. ஆனால் இம்மாதிரியான காரணத்துக்காக கருச்சிதைவு செய்பவர்களுக்கு இப்பூமியில் தணடனைக் கிடையாது, இதுதான் அந்த வித்தியாசமா?
புறத்தைப் பார்த்து புத்தகத்தை மதிப்பிடாதே
ஊனத்தைப் பார்த்து மனிதனை மதிப்பிடாதே
இவ்வார்த்தைகளில் எவ்வளவு உண்மைகள் இருக்கின்றன? அவர்களைப் பார்த்து பாவப்பட சொல்ல வில்லை. ஆனால் அவர்களையும் ஒரு சாதாரண மனிதர்களாய் நம்மில் ஒருவராய் பாருங்கள். ஏன்? இம்மாதிரியான குழந்தைகள் பலர் இவ்வுலகில் சாதனை புரியவில்லையா?
சிலர் தனது கரு அங்கஹீனம் குன்றியாதாக இருக்கின்றது எனத் தெரிய வந்தால் அக்கருவை அழித்து விடுகிறார்கள். இக்காலத்தில் அதுவும் பல அதிநவீன கருவிகள் இருக்கும் இக்காலத்தில் கருக்கலைப்பு மிகவும் சர்வ சாதாரணமான செயலாய் இருக்கின்றது.
ஏன் அறிவியல் கருவிகள் தவறு செய்வது கிடையாதா? சில மருத்துவர்கள் பிறக்கப்போகும் குழந்தை ஆண் எனக் கூறுவார்கள் ஆனால் பிறக்கும் குழந்தையோ பெண்ணாக இருக்கும். அதேபோல் இம்மாதிரியான விசயங்களிலும் இக்கருவிகள் தவறுகள் செய்வது கிடையாதா? அதற்காக அக்கரு உண்மையாக அங்கஹீனம் குன்றியதாக இருந்தால் அதைக் கருக்கலைப்பு செய்யலாம் என்றும் யாரும் கூறவில்லை.
அப்படி செய்பவர்களுக்கும் கொலைக்காரர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று எனக்குத் தெரியவில்லை. கொலைசெய்பவனுக்கு இங்கு தண்டனை உண்டு. ஆனால் இம்மாதிரியான காரணத்துக்காக கருச்சிதைவு செய்பவர்களுக்கு இப்பூமியில் தணடனைக் கிடையாது, இதுதான் அந்த வித்தியாசமா?
அப்படியென்றால் அக்குழந்தை இவ்வுலகில் படும் வேதனை மற்றும் அவமானங்களைக் கண்டு மகிழ்ச்சியடைய சொல்கிறீர்களா எனக் கேட்கிறீர்களா?இறைவன் நம்மால் இவர்களை கட்டி காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் அவர்களின் பெற்றோர்களிடம் அனுப்பி வைக்கின்றான். ஆனால் நாமோ அவன் விதைத்த விதையை முளையிலேயே கிள்ளி எறிந்து விடுகிறோம். வேதனை.. யாருக்கு தான் இல்லை வேதனைகள். இதுவே நன்றாக ஒடியாடிக் கொண்டிருக்கும் ஒரு குழந்தை ஒரு 10 அல்லது 18 வயதில் விபத்தால் ஊனமானால் அப்பொழுது என்ன செய்வீர்கள்? குழந்தை படும் வேதனை தாங்க முடியவில்லை எனக் கூறி பிள்ளையை கொன்று விடுவிர்களா? அப்பொழுது கொலைக்கு ஒவ்வாத மனம் கருவை மட்டும் அழிக்க எப்படி சம்மதம் தருகின்றது?",);
அப்படியென்றால் அக்குழந்தை இவ்வுலகில் படும் வேதனை மற்றும் அவமானங்களைக் கண்டு மகிழ்ச்சியடைய சொல்கிறீர்களா எனக் கேட்கிறீர்களா?
இறைவன் நம்மால் இவர்களை கட்டி காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் அவர்களின் பெற்றோர்களிடம் அனுப்பி வைக்கின்றான். ஆனால் நாமோ அவன் விதைத்த விதையை முளையிலேயே கிள்ளி எறிந்து விடுகிறோம்.
வேதனை.. யாருக்கு தான் இல்லை வேதனைகள். இதுவே நன்றாக ஒடியாடிக் கொண்டிருக்கும் ஒரு குழந்தை ஒரு 10 அல்லது 18 வயதில் விபத்தால் ஊனமானால் அப்பொழுது என்ன செய்வீர்கள்?
குழந்தை படும் வேதனை தாங்க முடியவில்லை எனக் கூறி பிள்ளையை கொன்று விடுவிர்களா? அப்பொழுது கொலைக்கு ஒவ்வாத மனம் கருவை மட்டும் அழிக்க எப்படி சம்மதம் தருகின்றது?
ஆகவே இறைவனின் செல்லக்குழந்தைகளை பாவமாகவோ, பாரமாகவோ, எண்ணி விடாதீர்கள். இக்குழந்தைகள் இறைவன் நமக்கு அளித்த ஒரு வரப்பிரசாதமாக நினைத்து அவர்களை நல்ல முறையில் வழி நடத்திச் செல்வோமென உறுதி மொழி எடுங்கள். அவர்கள் இறைவனின் செல்லக்குழந்தைகள். நன்றி
.
Posted by
parameswary namebley
at
8:42 PM
9
comments
28 June 2006
எதிர்பார்ப்பு
ஏமாற்றத்தின் ஆரம்பம்
எதிர்பார்ப்பு
நட்பில் எதிர்பார்ப்பு கூடாது என்பார்
ஆனால்
எதிர்பார்த்து எதிர்பார்த்து
ஏமார்ந்து போனேன்.....
Posted by
parameswary namebley
at
1:13 PM
4
comments
