ஒரு பக்க கதை
ஓடாதே.........
என்னை நீ உன் உடலில் எப்பொழுது செலுத்தினாயோ, அன்றிலிருந்து நீ எனக்கு அடிமை. நான் கொஞ்சம் கொஞ்சமாக உன் உயிரைக் குடிக்கப் போகின்றேன்.
என்னை நீ எப்பொழுது தீண்டினாயோ... அன்று முதல் நான் உன்னை ஆட்கொண்டுவிட்டேன். உன்னை அணு அணுவாக உறிஞ்சி, உனது உடலை சிதைக்கப்போகிறேன்.
உன்னை உன் குடும்பத்தை விட்டு பிரித்து, உனது நண்பர்களிடமிருந்து ஒதுக்கி, நடுத்தெருவிற்கு வரவைக்க போகின்றேன். உன்னை கண்டாலே பிறர் அருவருப்பாக உணர்ந்து ஒதுங்கி போகும் அளவிற்கு உன்னை நான் மாற்ற போகின்றேன். சிறுவர்கள் உன்னை கண்டால் கல்லால் அடித்து துரத்துவதை வேடிக்கை பார்க்க போகிறேன். நீ சாக்கடை, குப்பை தொட்டி போன்றவற்றின் அருகில் தெரு நாயும் வெறுக்கும் வண்ணம் கடும் துர்நாற்றத்துடன் ஈக்கள் மோய்க்க ஒடுங்கி உட்கார்ந்திருக்க போவதை பார்க்கப்போகிறேன்.
நீ என்னிடம் இருந்து எங்கு ஓடினாலும் உன்னை துரத்தி துரத்தி இழுக்கப்போகிறேன் என்று வெறியுடன் சொன்னது போதைப் பொருள்.
14 June 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
This is excellent Parames....!! munadiyae soliten..now again :)
Gud one
Post a Comment