06 March 2009

என்னடா உலகம் இது...

சில நாட்களாக உடம்பு சரியில்லாமல் இன்று வீட்டில் இருந்து வேலை செய்யலாம் என காலையில் அலுவலகம் செல்லவில்லை.மேலாளர் அலுவலகத்தில் இருந்து ஒரு வாரம் விடுப்பு கொடுத்திருப்பதால் அவரது பொருப்புகள் என்னிடம் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

வழக்கம் போல அலுவலகத்தின் netwoர்க்ல் இருந்து வேலை செய்துக் கொண்டிருக்கும் பொழுதே.. என்னுடம் வேலைசெய்யும் ஒரு தோழி என் கைதொலைபேசியில் அழைத்து இன்று நான் அவசர விடுப்பில் இருக்கிறேன் நாளை வருகிறேன் என கூறினார். அவரது பேச்சில் ஒரு பதற்றம். என்ன ஆயிற்றி எல்லாம் நலமா என கேட்டதுதான். அவர் மிகவும் பதற்றத்துடன், என் தங்கை நேற்று சில திருடர்களால் கடத்தப்பட்டால் என சொன்னர். கடவுளே, அவரது தங்கைக்கு வயது இருபதை கூட எட்டியிருக்காது..

என்ன நடந்தது என வினவியபோது. அவரின் தங்கை, அவரது கல்லூரியின் அருகாமையில் இருக்கும் குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டி வாடகைக்கு தங்கி பயில்கிருறாரம். நேற்று நான்கு குண்டர்கள் அவரது வீட்டில் புகுந்து அவரது கழுத்தில் பாரங் கத்தியை வைத்து அவரிடம் உள்ள அனைத்து பொருட்களையும் அபகரித்துக் கொண்டு அவரையும் கடத்திவிட்டார்களாம்.

உன்னை துண்டு துண்டாக வெட்டப் போகிறோம் என அந்த சின்ன பெண்ணையும் மிரட்டியிருக்கிறார். எப்படியோ கெஞ்சி கூத்தாடி அவள் அவர்களிடம் இருந்து தப்பித்து வந்துவிட்டாளாம்.

காலையில் பெற்றோர்கள் வெளியில் செல்லும் பொழுது கூட பத்திரம் என பல முறை கூறினார்களே.. அப்பொழுது அறியவில்லை அவர்களின் கவலையை....என்னடா உலகமிது... மிருகங்கள் நிறைந்த உலகமாக இருக்கிறதே....

No comments: