10 September 2010

நல்ல பல்பு....

தீடீர் என குளியல் அறையில் உள்ள விளக்கு எறியவில்லை.. அம்மாவும் மன கவலையுடன் யார் இதை இப்பொழுது மாற்றுவார்கள் .. என அப்பாவின் சிந்தைனையில் மூழ்கிவிட்டார்..

அப்பாவுடன் பல சமயங்களில் அவர் மின்சார வேளைகளை செய்யும் பொழுது உதவியாளராக இருந்தது என் மனம் கலங்கியது.

ஏணியை எடுத்து விளக்கை கலட்டிய பிறகு , அதை இனிமேல் பயன்படுத்த முடியாது என தெரிந்தது.

அப்பாவின் மின்சார பொருட்கள் இருக்கும் அறையை ஒரு அலசல் அலசலில், அவர் கைப்பட எழுதிய நல்ல பல்பு எனும் ஒரு பல்ப் என் கையில் சிக்கியது.
இப்படி ஒரு சூழ்நிலையில் நாங்கள் தடுமாற கூடாது என முன்பே எழுதிவைத்துள்ளார் போலும்..


என்றும் அவர் நினைவில் இருக்கும்,
பரமேஸ்வரி நேமிலி..

No comments: