20 June 2011


இது எப்படி இருக்கு....


நேற்று தந்தையர் தினம். சற்று மனம் கனத்துடன் இருந்தேன். சென்ற ஆண்டு இதே நேரம், அப்பாவுடன் விருந்து அவருடன் சாப்பிங் என குதுகலமாக இருந்தோம்.
இப்பொழுது.......
இன்று இருப்பார் நாளை இல்லை என அடிக்கடி கூறுபவர், அவர் கூற்றை எங்களுக்கு உணர்த்தி சென்றிருக்கிறார்.


இன்று தி.எச்.ஆர் ராக வில், இது எப்படி இருக்கு தந்தையர் தின சிறப்பு என ஒரு மகள் தன் ததையை ஏமாற்றுவதை போல நடித்திருப்பா.
அவர் வலி தெரியாம எங்கோவோ மாட்டிக் கொண்டிருப்பதாகவும், என்ன செய்வது என தெரியாமல் இருப்பதாகவும் அழுதுக் கொண்டே தன் தந்தையை ஏமாற்ற வேண்டும்.

ஒரு நிமிடம் தான் நான் இந்நிகழ்ச்சியைக் கேட்டேன். அத் தந்தையின் பதற்றம் கவலை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

என் அப்பாவக இருந்திருந்தால் அவருக்கு நான் கொடுக்கும் மன அழுத்தமே அவரது உடல் நிலையை இன்னும் மோசமடைய செய்திர்க்கு.

இது எப்படி இருக்கு... மோசம்...

No comments: