21 July 2006

இறைவனின் செல்லக் குழந்தைகள்
நாளை காலையில் சீக்கிரம் எழ வேண்டும் என அன்பு அன்னை கட்டளையிட்டார். காலையில் ஒரு திருமணத்திற்குச் செல்ல வேண்டும். எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் எறும்புப் போல சுறுசுறுப்புடன் எழுந்து, வீட்டு வேலைகளையும், தங்கள் சொந்த வேலைகளையும் செய்து முடித்து திருமணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

அப்பாடா! ஒரு வழியாக எல்லோரும் கிளம்பி விட்டார்கள். தந்தை மோட்டார் வாகனத்தில் அமர்ந்து விட்டார், ஆனால் அன்னையை இன்னும் காணவில்லை. "அம்மா, நாங்கள் ரெடி நீங்கள் சீக்கிரம் வாருங்கள்." என்று நாங்கள் வாயைத் திறப்பதற்குள் அம்மாவும் வேகமாக வந்து வாகனத்தில் ஏறினார்.

திருமண மண்டபத்தை நாங்கள் அடையும்பொழுது இன்னும் மாப்பிள்ளை மற்றும் பெண்ணுக்கு அலங்காரங்கள் நடந்துக்கொண்டிருந்தன. சரியான நேரத்திற்குள் நாங்கள் வந்து சேர்ந்தோம் என்று ஒரு பெருமூச்சு, இல்லையென்றால் தந்தையிடமிருந்து நன்றாக திட்டு வாங்கியிருப்போம்.

அங்கே பார்! அந்த பொண்ணு அழகான பாவாடை அணிந்திருக்கிறாள், அவளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது அது. இங்கே பார் இப்பையனின் காலணியின் வர்ணம் நன்றாக இருக்கின்றது" என எங்களால் முடிந்த அளவு குழந்தைகளை ரசித்துக் கொண்டிருந்தோம். இப்பொழுதுதான் தெரிகின்றது ஏன் தாய்மார்கள் தங்களின் பிள்ளைகளுக்கு திருஷ்டி சுற்றிப் போடுகிறார்கள் என்று. எங்களைப் போன்றோரின் பொல்லாத கண் பிள்ளைகளுக்கு நோய் வரக்காரணமாக இருந்து விட்டால்? இப்படியே எங்களது அலசல்கள் தொடர்ந்தன. எங்கள் முன் ஒரு பெண்மணியும் அவரின் ஐந்து குழந்தைகளும் உட்கார்ந்து இருந்தார்கள். நான்கு பெண்கள் மற்றும் கடைக்குட்டி ஒரு ஆண். அந்த ஆண்பையனோ எங்கள் இருவரையும் பார்த்து ஆச்சரியப் பட்டான். எங்களுக்கு அந்த வியப்பான பார்வையின் காரணம் புரிந்தது. நாங்கள் பார்ப்பதற்கு இரட்டை குழந்தைகள் மாதிரி இருப்போம் ஆகவே சில குழந்தைகள் எங்களை வியப்பாகப் பார்ப்பார்கள். எப்படி இருவரும் ஒரே மாதிரி இருக்கிறார்கள் என்று. அந்த வயதில் அவர்களுக்கு அறிவியல் தெரியாது அல்லவா? நாங்கள் அச்சிறுவனைப் பற்றியும் எங்கள் சிறு வயது அனுபவங்களையும் பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுதுதான் எங்கள் கவனத்தை ஈர்த்தாள் அச் சிறுமி. அவளும் அந்த ஐவரில் ஒருத்தி. "இறைவனின் செல்லக் குழந்தைகளில் ஒருத்தி" என்று எனது சகோதரி கூறினாள்.


அப்பாவும் அம்மாவும் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களிடம் பேசி கொண்டிருந்தார்கள். நாங்கள் இருவரும் வழக்கம்போல அங்கும் இங்கும் ஓடி கொண்டிருந்த சின்ன சிறிய வாண்டுகளை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தோம்.

"அங்கே பார்! அந்த பொண்ணு அழகான பாவாடை அணிந்திருக்கிறாள், அவளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது அது. இங்கே பார் இப்பையனின் காலணியின் வர்ணம் நன்றாக இருக்கின்றது" என எங்களால் முடிந்த அளவு குழந்தைகளை ரசித்துக் கொண்டிருந்தோம். இப்பொழுதுதான் தெரிகின்றது ஏன் தாய்மார்கள் தங்களின் பிள்ளைகளுக்கு திருஷ்டி சுற்றிப் போடுகிறார்கள் என்று. எங்களைப் போன்றோரின் பொல்லாத கண் பிள்ளைகளுக்கு நோய் வரக்காரணமாக இருந்து விட்டால்?

இப்படியே எங்களது அலசல்கள் தொடர்ந்தன. எங்கள் முன் ஒரு பெண்மணியும் அவரின் ஐந்து குழந்தைகளும் உட்கார்ந்து இருந்தார்கள். நான்கு பெண்கள் மற்றும் கடைக்குட்டி ஒரு ஆண். அந்த ஆண்பையனோ எங்கள் இருவரையும் பார்த்து ஆச்சரியப் பட்டான். எங்களுக்கு அந்த வியப்பான பார்வையின் காரணம் புரிந்தது. நாங்கள் பார்ப்பதற்கு இரட்டை குழந்தைகள் மாதிரி இருப்போம் ஆகவே சில குழந்தைகள் எங்களை வியப்பாகப் பார்ப்பார்கள். எப்படி இருவரும் ஒரே மாதிரி இருக்கிறார்கள் என்று. அந்த வயதில் அவர்களுக்கு அறிவியல் தெரியாது அல்லவா?

நாங்கள் அச்சிறுவனைப் பற்றியும் எங்கள் சிறு வயது அனுபவங்களையும் பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுதுதான் எங்கள் கவனத்தை ஈர்த்தாள் அச் சிறுமி. அவளும் அந்த ஐவரில் ஒருத்தி. "இறைவனின் செல்லக் குழந்தைகளில் ஒருத்தி" என்று எனது சகோதரி கூறினாள்.
அனைவரும்தானே இறைவனின் குழந்தைகள். ஆமாம், நாம் அனைவரும் இறைவனின் குழந்தைகள் தான் அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஆனால் இவர்கள் இறைவனின் செல்லக் குழந்தைகள். எல்லோரையும் இறைவனின் செல்லக் குழந்தைகள் என கூறுவதைவிட இவர்களை மட்டும் இறைவனின் செல்லக் குழந்தைகள் என கூறுவது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். யார் இவர்கள்?ஆம் இவர்களைதான் நம்மில் பலர் ஊனமுற்றவர்கள் என்று கூறுவார்கள். ஆனால் எனக்குப் பிடித்தமான சொல் இறைவனின் செல்லக் குழந்தைகள். எவ்வளவு அழகான வார்த்தை. இவர்களை இப்படி கூப்பிடுவது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது பாருங்கள். இனி நாம் அனைவரும் இறைவனின் செல்லக் குழைந்தைகள் என்றே அழைப்போம். இதற்கிடையில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி ஊட்டியது அந்த இறைவனின் செல்லக் குழந்தையின் சகோதரிகளின் செயல்கள். அவர்கள் அவளை மிகவும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொண்டார்கள். அதுவும் அச்சிறுமியின் தங்கை தனக்கு எந்த உணவு கிடைத்தாலும் முதலில் தன் அக்காவுக்கு (இறைவனின் செல்லக்குழந்தைக்கு கொடுத்துவிட்டுதான் தான் உண்டாள். அந்த அற்புதமான காட்சியை கண்குளிர நாங்கள் பார்த்து ரசித்தோம். இவர்களின் ஒற்றுமை என்றென்றும் இப்படியே இருக்கவேண்டும் என நாங்கள் இறைவனை வேண்டிக்கொண்டோம் அது எப்படி ஒற்றுமை உடையும் என வினவுகிறீர்களா? எல்லாம் நமது புத்திக் கெட்ட மதியால்தான். நமக்கு வயது ஆக ஆக நாம் நமது புத்தியை பயன்படுத்துவதை விட நம்மை சுற்றி உள்ளவர்கள் என்ன சொல்கிறார்கள் எனறே பயப்படுகின்றோம். அதன்படி செயல்படுகின்றோம்.

யார் இறைவனின் செல்லக் குழந்தைகள்?
அனைவரும்தானே இறைவனின் குழந்தைகள். ஆமாம், நாம் அனைவரும் இறைவனின் குழந்தைகள் தான் அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஆனால் இவர்கள் இறைவனின் செல்லக் குழந்தைகள். எல்லோரையும் இறைவனின் செல்லக் குழந்தைகள் என கூறுவதைவிட இவர்களை மட்டும் இறைவனின் செல்லக் குழந்தைகள் என கூறுவது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

யார் இவர்கள்?
ஆம் இவர்களைதான் நம்மில் பலர் ஊனமுற்றவர்கள் என்று கூறுவார்கள். ஆனால் எனக்குப் பிடித்தமான சொல் இறைவனின் செல்லக் குழந்தைகள். எவ்வளவு அழகான வார்த்தை. இவர்களை இப்படி கூப்பிடுவது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது பாருங்கள். இனி நாம் அனைவரும் இறைவனின் செல்லக் குழைந்தைகள் என்றே அழைப்போம்.

இதற்கிடையில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி ஊட்டியது அந்த இறைவனின் செல்லக் குழந்தையின் சகோதரிகளின் செயல்கள். அவர்கள் அவளை மிகவும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொண்டார்கள். அதுவும் அச்சிறுமியின் தங்கை தனக்கு எந்த உணவு கிடைத்தாலும் முதலில் தன் அக்காவுக்கு (இறைவனின் செல்லக்குழந்தைக்கு கொடுத்துவிட்டுதான் தான் உண்டாள். அந்த அற்புதமான காட்சியை கண்குளிர நாங்கள் பார்த்து ரசித்தோம். இவர்களின் ஒற்றுமை என்றென்றும் இப்படியே இருக்கவேண்டும் என நாங்கள் இறைவனை வேண்டிக்கொண்டோம்

அது எப்படி ஒற்றுமை உடையும் என வினவுகிறீர்களா? எல்லாம் நமது புத்திக் கெட்ட மதியால்தான். நமக்கு வயது ஆக ஆக நாம் நமது புத்தியை பயன்படுத்துவதை விட நம்மை சுற்றி உள்ளவர்கள் என்ன சொல்கிறார்கள் எனறே பயப்படுகின்றோம். அதன்படி செயல்படுகின்றோம்.
சிலர் அவர்களின் சகோதரர்கள் யாரேனும் இறைவனின் செல்லக்குழந்தை என்றுக் கூறுவதை கேவலம் என எண்ணுகிறார்கள். ஏன் அப்படி என்று நாம் அலசி ஆராய்ந்தோமானால் அதற்கு முதல் காரணம் அவர்களின் மானங்கெட்ட சுய கௌரவம். ஐயோ! என் சாகோதரர்களில் ஒருவர் இறைவனின் செல்லக்குழந்தை என்று என் நண்பர்களுக்கு தெரிந்தால் அவர்கள் என்னிடம் பழகமாட்டார்கள். என்னை ஒதுக்கி வைத்துவிடுவார்கள் என்று தேவையில்லாமல் நினைத்து குழம்பிவிடுகிறார்கள். இது உண்மையா என்று சிந்தித்துப் பார்த்தால், ஒரு இருபத்து ஐந்து சதவிகிதம் உண்மை இருப்பதை நாம் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும். எங்கேயோ படித்தக் கவிதை இது...பாதி சிறகுகளுடன் பறக்க நினைக்கிறவர்களை,மீதி சிறகாய் இருந்து நாம் பறக்க வைப்போம்".யார் எழுதியது என தெரியவில்லை. யாராகினும் இக்கவிதையை உதிர்த்த அந்த சிந்தனைக்கு மிக்க நன்றி. சிறகு உடைந்த பறவைகள் என கடவுளுக்குத் தெரிந்தும் அதை நம்மால் பறக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையால் தானே நம்மிடம் அவர் அனுப்பி வைத்தார்? ஆனால் சிலர் அவரது நம்பிக்கையை அவநம்பிக்கையாக மாற்றுகிறார்கள்.



சிலர் அவர்களின் சகோதரர்கள் யாரேனும் இறைவனின் செல்லக்குழந்தை என்றுக் கூறுவதை கேவலம் என எண்ணுகிறார்கள். ஏன் அப்படி என்று நாம் அலசி ஆராய்ந்தோமானால் அதற்கு முதல் காரணம் அவர்களின் மானங்கெட்ட சுய கௌரவம். ஐயோ! என் சாகோதரர்களில் ஒருவர் இறைவனின் செல்லக்குழந்தை என்று என் நண்பர்களுக்கு தெரிந்தால் அவர்கள் என்னிடம் பழகமாட்டார்கள். என்னை ஒதுக்கி வைத்துவிடுவார்கள் என்று தேவையில்லாமல் நினைத்து குழம்பிவிடுகிறார்கள். இது உண்மையா என்று சிந்தித்துப் பார்த்தால், ஒரு இருபத்து ஐந்து சதவிகிதம் உண்மை இருப்பதை நாம் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும்.

எங்கேயோ படித்தக் கவிதை இது...

"பாதி சிறகுகளுடன் பறக்க நினைக்கிறவர்களை,
மீதி சிறகாய் இருந்து நாம் பறக்க வைப்போம்".

யார் எழுதியது என தெரியவில்லை. யாராகினும் இக்கவிதையை உதிர்த்த அந்த சிந்தனைக்கு மிக்க நன்றி.

சிறகு உடைந்த பறவைகள் என கடவுளுக்குத் தெரிந்தும் அதை நம்மால் பறக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையால் தானே நம்மிடம் அவர் அனுப்பி வைத்தார்? ஆனால் சிலர் அவரது நம்பிக்கையை அவநம்பிக்கையாக மாற்றுகிறார்கள்.
புறத்தைப் பார்த்து புத்தகத்தை மதிப்பிடாதே ஊனத்தைப் பார்த்து மனிதனை மதிப்பிடாதே இவ்வார்த்தைகளில் எவ்வளவு உண்மைகள் இருக்கின்றன? அவர்களைப் பார்த்து பாவப்பட சொல்ல வில்லை. ஆனால் அவர்களையும் ஒரு சாதாரண மனிதர்களாய் நம்மில் ஒருவராய் பாருங்கள். ஏன்? இம்மாதிரியான குழந்தைகள் பலர் இவ்வுலகில் சாதனை புரியவில்லையா? சிலர் தனது கரு அங்கஹீனம் குன்றியாதாக இருக்கின்றது எனத் தெரிய வந்தால் அக்கருவை அழித்து விடுகிறார்கள். இக்காலத்தில் அதுவும் பல அதிநவீன கருவிகள் இருக்கும் இக்காலத்தில் கருக்கலைப்பு மிகவும் சர்வ சாதாரணமான செயலாய் இருக்கின்றது. ஏன் அறிவியல் கருவிகள் தவறு செய்வது கிடையாதா? சில மருத்துவர்கள் பிறக்கப்போகும் குழந்தை ஆண் எனக் கூறுவார்கள் ஆனால் பிறக்கும் குழந்தையோ பெண்ணாக இருக்கும். அதேபோல் இம்மாதிரியான விசயங்களிலும் இக்கருவிகள் தவறுகள் செய்வது கிடையாதா? அதற்காக அக்கரு உண்மையாக அங்கஹீனம் குன்றியதாக இருந்தால் அதைக் கருக்கலைப்பு செய்யலாம் என்றும் யாரும் கூறவில்லை. அப்படி செய்பவர்களுக்கும் கொலைக்காரர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று எனக்குத் தெரியவில்லை. கொலைசெய்பவனுக்கு இங்கு தண்டனை உண்டு. ஆனால் இம்மாதிரியான காரணத்துக்காக கருச்சிதைவு செய்பவர்களுக்கு இப்பூமியில் தணடனைக் கிடையாது, இதுதான் அந்த வித்தியாசமா?

புறத்தைப் பார்த்து புத்தகத்தை மதிப்பிடாதே
ஊனத்தைப் பார்த்து மனிதனை மதிப்பிடாதே


இவ்வார்த்தைகளில் எவ்வளவு உண்மைகள் இருக்கின்றன? அவர்களைப் பார்த்து பாவப்பட சொல்ல வில்லை. ஆனால் அவர்களையும் ஒரு சாதாரண மனிதர்களாய் நம்மில் ஒருவராய் பாருங்கள். ஏன்? இம்மாதிரியான குழந்தைகள் பலர் இவ்வுலகில் சாதனை புரியவில்லையா?

சிலர் தனது கரு அங்கஹீனம் குன்றியாதாக இருக்கின்றது எனத் தெரிய வந்தால் அக்கருவை அழித்து விடுகிறார்கள். இக்காலத்தில் அதுவும் பல அதிநவீன கருவிகள் இருக்கும் இக்காலத்தில் கருக்கலைப்பு மிகவும் சர்வ சாதாரணமான செயலாய் இருக்கின்றது.

ஏன் அறிவியல் கருவிகள் தவறு செய்வது கிடையாதா? சில மருத்துவர்கள் பிறக்கப்போகும் குழந்தை ஆண் எனக் கூறுவார்கள் ஆனால் பிறக்கும் குழந்தையோ பெண்ணாக இருக்கும். அதேபோல் இம்மாதிரியான விசயங்களிலும் இக்கருவிகள் தவறுகள் செய்வது கிடையாதா? அதற்காக அக்கரு உண்மையாக அங்கஹீனம் குன்றியதாக இருந்தால் அதைக் கருக்கலைப்பு செய்யலாம் என்றும் யாரும் கூறவில்லை.

அப்படி செய்பவர்களுக்கும் கொலைக்காரர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று எனக்குத் தெரியவில்லை. கொலைசெய்பவனுக்கு இங்கு தண்டனை உண்டு. ஆனால் இம்மாதிரியான காரணத்துக்காக கருச்சிதைவு செய்பவர்களுக்கு இப்பூமியில் தணடனைக் கிடையாது, இதுதான் அந்த வித்தியாசமா?
அப்படியென்றால் அக்குழந்தை இவ்வுலகில் படும் வேதனை மற்றும் அவமானங்களைக் கண்டு மகிழ்ச்சியடைய சொல்கிறீர்களா எனக் கேட்கிறீர்களா?இறைவன் நம்மால் இவர்களை கட்டி காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் அவர்களின் பெற்றோர்களிடம் அனுப்பி வைக்கின்றான். ஆனால் நாமோ அவன் விதைத்த விதையை முளையிலேயே கிள்ளி எறிந்து விடுகிறோம். வேதனை.. யாருக்கு தான் இல்லை வேதனைகள். இதுவே நன்றாக ஒடியாடிக் கொண்டிருக்கும் ஒரு குழந்தை ஒரு 10 அல்லது 18 வயதில் விபத்தால் ஊனமானால் அப்பொழுது என்ன செய்வீர்கள்? குழந்தை படும் வேதனை தாங்க முடியவில்லை எனக் கூறி பிள்ளையை கொன்று விடுவிர்களா? அப்பொழுது கொலைக்கு ஒவ்வாத மனம் கருவை மட்டும் அழிக்க எப்படி சம்மதம் தருகின்றது?",);

அப்படியென்றால் அக்குழந்தை இவ்வுலகில் படும் வேதனை மற்றும் அவமானங்களைக் கண்டு மகிழ்ச்சியடைய சொல்கிறீர்களா எனக் கேட்கிறீர்களா?

இறைவன் நம்மால் இவர்களை கட்டி காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் அவர்களின் பெற்றோர்களிடம் அனுப்பி வைக்கின்றான். ஆனால் நாமோ அவன் விதைத்த விதையை முளையிலேயே கிள்ளி எறிந்து விடுகிறோம்.

வேதனை.. யாருக்கு தான் இல்லை வேதனைகள். இதுவே நன்றாக ஒடியாடிக் கொண்டிருக்கும் ஒரு குழந்தை ஒரு 10 அல்லது 18 வயதில் விபத்தால் ஊனமானால் அப்பொழுது என்ன செய்வீர்கள்?

குழந்தை படும் வேதனை தாங்க முடியவில்லை எனக் கூறி பிள்ளையை கொன்று விடுவிர்களா? அப்பொழுது கொலைக்கு ஒவ்வாத மனம் கருவை மட்டும் அழிக்க எப்படி சம்மதம் தருகின்றது?

ஆகவே இறைவனின் செல்லக்குழந்தைகளை பாவமாகவோ, பாரமாகவோ, எண்ணி விடாதீர்கள். இக்குழந்தைகள் இறைவன் நமக்கு அளித்த ஒரு வரப்பிரசாதமாக நினைத்து அவர்களை நல்ல முறையில் வழி நடத்திச் செல்வோமென உறுதி மொழி எடுங்கள். அவர்கள் இறைவனின் செல்லக்குழந்தைகள். நன்றி
.

9 comments:

thiagu1973 said...

அன்புள்ள பரமு நீங்கள் வலைபூ ஆரம்பித்தற்கு
முதலில்என் வாழ்த்துக்கள் !
தங்களின் சமூக சிந்தனை மேலும் மேலும்
வளர்ந்து வருவது கண்டு மிகவும் மகிழ்ச்சி!

அன்புடன்
தியாகு

rnatesan said...

நல்லதொரு சிந்தனை பரமேஸ்வரி!!
இப்படியெல்லாம் எல்லோராலும் சிந்திக்க இயலாது!!
படைப்பை வெளியிட்ட பின் ஒரு சிறிய கார்டு மூலம் தெரிவித்தால் பார்ப்பதற்கு சௌகரியமாய் இருக்கும்.வாழ்த்துக்கள்!!

parameswary namebley said...

நன்றி திரு தியாகு!!!!!!
மனதில் தோன்றியதை எழுதினேன்.இச்சமூகத்தை திருத்துவது யார்!!!

parameswary namebley said...

நன்றி நடேசன் அய்யா!!:)
கார்டு என்ன தந்தியே கொடுத்துவிடுகிறேன்.:)

Anonymous said...

உண்மைதான் பரமேஸ்வரி,இறைவனின் செல்லக் குழந்தைகளை,சிலர் உதாசீனப்படுத்துகிறார்கள்,அனைவரும் ,அவர்களுக்கு அன்பும் அரவணைப்பும்,கொடுத்து சந்தோசவானில் பற‌க்கவைப்போம்,சிறப்பான தலைப்பில் அருமையான கட்டுரையை சமர்ப்பித்ததற்க்கு வாழ்த்துக்கள்,

நண்பன்
நம்பிக்கைபாண்டியன்

Anonymous said...

//நன்றி நடேசன் அய்யா!!:)
Nadesan ayya illai ..Nadesan Chitappa :-)

rnatesan said...

அது என்னம்மா ஒரு நேரம் அய்யா என்கிறாய்!!பின் சித்தப்பா என்கிறாய்!
உறவெல்லாம் வீட்டிலேதான்!!வலைப்பதிவில் இல்லை!!!

Anonymous said...

Chitappa.. ayyanu sonnathu naan illai... athu taan yarunu yoshichikitu iruken:)

rnatesan said...

athu eppadi saththiyamaakum????