08 February 2007

அரசியல்வாதி ஆக மாட்டேன்....

அரசியல் என்றாலே எனக்கு வெறுப்பு.. ஏனோ தெரியவில்லை.. அந்த பக்கம் தலை வைத்து படுக்க மாட்டேன். ஏன்?

பெரிய காரணம் ஒன்றுமில்லை. அரசியலில் சேர்ந்தாலே பூவுடன் சேர்ந்து நாறும் மணக்கும் என்று சொல்வார்கள். நாம் நல்லது செய்தாலும் நம்மை சுற்றி நடக்கும் கெட்டதையும் நம் தலையில் திணித்துவிடுவார்கள். என்னதான் நல்லது செய்தாலும் நமக்கு எப்பொழுதும் நல்ல பெயர் மட்டுமே கிடைப்பதில்லை. அனைவரிடமும் திட்டு வாங்குகிற அளவிற்கு எனக்கு மன தைரியமில்லை.

அது மட்டுமல்லாமல் இன்னும் சிலர் சொல்வார்கள், நீ என்ன தான் நல்லவனா இருந்தாலும் உன்னை அங்க மாற்றிடுவாங்கனு.. அதான்.. நல்லவனா இருக்கிற என்னை தீயவனா மாற்றிவிட்டால்? அப்புறம் நான் நினைத்தாலும் என்னை நான் மாற்ற முடியாது...
ஆனால் யார் அப்பொ ஊரை திருத்துவது? யாராவது ரொம்ப நல்ல தைரியசாலி, எதுக்கும் பயப்படாம, யாராலும் தன்னை மாற்ற முடியாதுனு நினைக்கிறவங்க ஆகலாம்.

ஆனால் ஒன்னு.. கண்டிப்பா அவர் இறந்த பிறகு அவர் நல்லவரா கெட்டவரா என்று ஒரு பெரிய பட்டிமன்றமே நடக்கும்.. ஊர் எங்கயும்....

No comments: