18 February 2008


நம் காதல்

நான் உனக்கு மனைவியாக
நம் குழந்தைகளின் தாயாக‌
அவர்களின் குறும்புகளுக்கிடையில்
ஒரு பிஞ்சு மழலையாக

இப்படி துன்பமற்ற வாழ்க்கைக்காக‌
நெஞ்சம் முழுக்க பட்டாம்பூச்சியாகக்

காத்திருக்கையில்
விழுந்தது மனதில் ஒரு பாரம்
உனது பிரிவின் செய்தி

நெடிப் பொழுதில் எ(ன்)னை மறந்தேன்
பைத்தியமாகத் திரிந்தேன்
இதுவா நமது காதல்?
என்றும் மன உறுதியுடன்
முகத்தில் புன்னகை கொழிக்க‌
எதையும் எதிர்க்கும் சக்தியுடன்
இருக்கும் நீ
இன்று என்னுள்
ஒரு சுவாசமாக

இரத்த நாளத்தில் ஓடும்

உயிராக
எனது வாழ்க்கையில் இருக்கையில்
உன்னை மறக்காமல்
உன் வாழ்க்கை நெறிகளை
பின்பற்ற உறுதுணையாக
இருப்பது நம் காதல்

No comments: